மேலும் அறிய

பாஜக தலைவர்களைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கல்வீச்சு.. 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹரன்பூர் ஆகிய பகுதிகளில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த கல்வீச்சு குறித்து காவல்துறையினர் பேட்டியளித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹரன்பூர் ஆகிய பகுதிகளில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த கல்வீச்சு குறித்து காவல்துறையினர் பேட்டியளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரயாக்ராஜ் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார், `இந்தப் போராட்டத்தின் மூளையாக செயல்பட்ட ஜாவித் அகமத் என்பவரைக் கைது செய்துள்ளோம். மேலும், பலர் இதே பட்டியலில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. காவல்துறை மீது சிறுவர்களை இந்த சமூக விரோதிகள் பயன்படுத்தியுள்ளார்கள்.. 29 முக்கிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ எனக் கூறியுள்ளார். 

பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா முதலானோர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு போராட்டங்கள் வெடித்தன. 

பாஜக தலைவர்களைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கல்வீச்சு.. 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

சுமார் 70 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரயாக்ராஜ் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், `இதுகுறித்து எந்த பின்னணியும் இதுவரை தெரியவில்லை.. அய்மிம் கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன.. ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். 

பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் கத்ரி, `இதுவரை 68 பேரைக் கைது செய்துள்ளோம்.. பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார். 

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 130 பேரைக் கைது செய்ததாகக் கூறியிருந்தது. 

பாஜக தலைவர்களைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கல்வீச்சு.. 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காவல்துறை சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பிரஷாந்த் குமார் இதுகுறித்து பேசிய போது, `போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என சஹரன்பூர் பகுதியில் 45 பேர், பிரயாக்ராஜ் பகுதியில் 37 பேர், அம்பேத்கர் நகர் பகுதியில் 23 பேர், ஹத்ரஸ் பகுதியில் 20 பேர், மொரதாபாத் பகுதியில் 7 பேர், பிரோசாபாத் பகுதியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ எனக் கூறியிருந்தார். 

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டதோடு, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget