மேலும் அறிய

Brindavan Express : "பெங்களூரில் இருந்து சென்னை வரும் பிருந்தாவன் ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதம்” தவித்து கிடக்கும் பயணிகள்..!

”இதே நிலை நீடித்தால் இரவு 9 மணிக்கு சென்னை வந்திருக்க வேண்டிய ரயில் இரவு 12 மணிக்கு மேல்தான் சென்னை வந்தடையும்”

பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு கிளம்பிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் சென்னை வந்து சேராததால் பயணிகளும் அவர்களது உறவினர்களும் தவித்துப் போய் உள்ளனர்.

சிக்னல் கோளாறால் தாமதம் என தகவல்

பெங்களூரில் இருந்து ரயில் கிளம்பியதில் இருந்து இடையிடையே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் ஒவ்வொரு ரயில் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 15 நிமிட தாமதத்தில் தொடங்கி, ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என அவ்வப்போது ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கங்கு ஏற்பட்ட சிக்னல் பிரச்னையை சரி செய்த பிறகு கிட்டத்தட்ட 3 மணி நேர தாமதத்துடன் ரயில் சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

மாலை 5.30 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 6 மணி 40 நிமிடங்களுக்கு வந்தடைந்திருக்கிறது. வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு 5.43 மணிக்கு வந்திருக்க வேண்டிய ரயில் இரவு 7.02 மணிக்கே வந்திருக்கிறது.

தற்போதைய கணக்கின்படி, பிருந்தாவன் ரயில் சென்னை செண்ட்ரயில் ரயில் நிலையத்தை வந்தடைய இரவு 12 மணிக்கு மேல் ஆகலாம் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் அலட்சியமே காரணமா ?

ரயிலின் இந்த தாமதத்தில் பல்வேறு திட்டமிடலுடன் சென்னை வரவேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்து வந்துள்ளனர். பயணிகள் குறித்த நேரத்திற்கு சென்னை வந்து சேராததால் அவர்களது உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்.

ரயிலின் இந்த பெரும் தாமதத்திற்கு முறையான காரணங்கள் ஏதும் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சிக்னல் கோளாறு மட்டுமே காரணமா ? அல்லது வேறு ஏதும் காரணமாக இருக்குமா ? என்று ரயிலில் பயணிக்கு பல நூறு பேர் கவலையுடன் எப்போது சென்னை சென்று சேர்வோம் என்று கவலையுடன் கம்பார்ட்மெண்டிலேயே காத்திருக்கின்றனர்.

குழந்தைகளோடு பலர் பயணிப்பதால் இரவு உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு 12 முதல் 1 மணிக்கே சென்னை வர வாய்ப்பு 

இதே தாமதம் நிலவினால், இரவு 9.10 மணிக்கு சென்னை வரவேண்டிய ரயில், நள்ளிரவு 12 மணியை தாண்டியே சென்னை வரும் என கூறப்படுகிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget