மேலும் அறிய

Lateral Entry: லேட்ரல் என்ட்ரி மூலம் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

இந்த நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு,  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

லேட்ரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்யும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை என்பது முன்பில் இருந்தே இருந்து வந்தது. இதன்படி, தகுதியான ஆட்கள், இட ஒதுக்கீடு வரைமுறை இல்லாமல் நியமனம் செய்யப்படுவார்கள்.

45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி, யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு குறித்த ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த பணியிடங்கள் அனைத்தும் முடிவெடுக்கும் நிலையில் உள்ள தலைமை பொறுப்பாகும். எனினும் இது லேட்டரல் என்ட்ரி முறையிலான பணி என்பதால் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது. இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்று எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து

இந்த நிலையில் லேட்ரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சூடானுக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 

’’2005ஆம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையிலான குழு, லேட்ரல் என்ட்ரி முறையை அங்கீகரித்தது. 2013ஆம் ஆண்டு 6ஆவது நிதி ஆயோக் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. எனினும் இதற்கு முன்பும் பின்பும் ஏராளமான உயர் பதவிகள், லேட்ரல் என்ட்ரி மூலம் நிரப்பப்பட்டன. கடந்த கால அரசாங்கத்தில் யுஐடிஏஐ தலைமை உள்ளிட்ட பொறுப்புகள் இவ்வாறே நிரப்பப்பட்டன. 

இட ஒதுக்கீடு அவசியம்- பிரதமர் மோடி

எனினும் வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யுபிஎஸ்சி அண்மையில் வெளியிட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இத்தகைய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், அந்த விளம்பரத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
Embed widget