மேலும் அறிய

Bihar Prisoner : சிறையில் திடீரென ஆய்வு...பதற்றத்தில் செய்வதறியாமல் தவிப்பு...மொபைல் போனை விழுங்கிய கைதி..நடந்தது என்ன?

பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் உள்ள சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சமீப காலமாக, சிறைகளில் கைதிகள் செல்போன், போதை பொருள் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதை கட்டுப்படுத்த, சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் உள்ள சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதிரடி சோதனை:

அப்போது, கைதிகள் செல்போனை பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே, சிறை அதிகாரிகளிடம் மாட்டி கொண்டு விடுவோமா என்ற அச்சத்தில் கைதி ஒருவர் செல்போனை விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. கைதியான கைஷர் அலி, நேற்று முன் தினம் ஆய்வின் போது தொலைபேசியை விழுங்கியுள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்:

இந்த சூழ்நிலையில், நேற்று அலிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார், "சிறை அதிகாரிகளை அழைத்து என்ன நடந்தது என்பது குறித்து கைஷர் அலி விவரித்துள்ளார்.

அவர் உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கைதி அலியின் எக்ஸ்ரேயில் அவரது வயிற்றில் துகள் இருப்பது தெரியவந்தது" என்றார்.

இது தொடர்பாக மருத்துவமனையின் அவசர பிரிவு மருத்துவர் சலாம் சித்திக் பேசுகையில், "கைதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றின் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் துகள்கள் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதை முழுமையாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

மருத்துவமனையால் மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டு, கைதி மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ் சட்டம்) விதிகளின் கீழ் கோபால்கஞ்ச் காவல்துறையினரால் அலி கைது செய்யப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை:

பிகார் சிறையில் கைதிகள் செல்போனை பயன்படுத்திய சம்பவம், சிறை அதிகாரிகள் எந்த அளவு செயல்படுகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 35 செல்போன்கள், ஏழு சிம்கார்டுகள் மற்றும் 17 செல்போன் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கதிஹார், பக்சர், கோபால்கஞ்ச், நாலந்தா, ஹாஜிபூர், ஆரா, ஜெகனாபாத் மற்றும் மாநிலத்தில் உள்ள சில சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget