மேலும் அறிய

UKG Child : யுகேஜி மாணவியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி: தெளிவு கோரி உத்தரவிட்ட மாநில அரசு

பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது.  

பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது.  இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் 6 வயது குழந்தை என்றுகூட பாராமல் கடுமையாக நடந்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், மாணவியின் பெற்றோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பெங்களூரு அனேக்கல் டவுனின் புறநகரில் உள்ள செயின்ட் ஜோசஃப்ஸ் சாமினேட் அகாடமியில் நடந்துள்ளது. அண்மையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரேங்க் கார்டு கொடுத்துள்ளனர். அதில் அவர் ஒரு பாடத்தில் 40க்கும் 5 மதிப்பெண் வாங்கியதாகக் குறிப்பிட்டு தேர்வில் ஃபெயில் எனக் கூறியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் குமார் இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை ஃபெயிலாக்கியுள்ள அந்த அற்புதமான பள்ளிக் கூடத்திற்கு நான் ஒருமுறையாக சென்று பார்வையிட விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது. இருந்தும் அவ்வாறாக ஃபெயிலாக்கி உள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தையின் தந்தை மனோஜ் பாதல், இவ்வாறாக 6 வயது குழந்தையை ஃபெயிலாக்கி அறிவித்துள்ளது அக்குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், நாங்கள் எந்த ஒரு மாணவனையும் ஃபெயிலாக்குவதில்லை. நாங்கள் மொபைல் செயலி மூலம் ரிசல்ட் அனுப்புகிறேன். அந்த செயலீயில் பாஸ் மார்க், ஃபெயில் மார்க் செட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு காட்டியிருக்கும். நாங்கள் யாரையும் ஃபெயிலாக்கவில்லை. இது தொடர்பாக பெற்றோருக்கு விளக்கமளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்திற்கும் ஃபெயில் மார்க் என குறிப்பிடும் ப்ரோகிராமை மாற்றுமாறும் கூறியுள்ளோம்.

இருப்பினும் சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு வட்டார கல்வி அலுவலர் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
எல்கேஜி, யூகேஜி போன்ற மழலையர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக்கூடாது என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்சிஇஆர்டி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் வேலை, மழலையர் பள்ளி குழந்தைகளை தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர் என்று அடையாளப்படுத்துவற்கு இல்லை. அப்படி குழந்தைகளை அடையாளப்படுத்தினால் அவர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு மந்த நிலைக்கு செல்கிறார்கள். இதற்கு பல பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, கல்வி முறையில், எவை எல்லாம் செய்யக்கூடாது, செய்யக் கூடியது என்று என்சிஇஆர்டி வரையறை செய்துள்ளது. அதன்படி, மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எந்தவொரு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக் கூடாது. அதில், குழந்தைகளுக்கு, சமூகத்தோடு எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சுருக்கமாக எழுத, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் உள்ள பல மழலையர் பள்ளிகள், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் மற்றும் ஆங்கிலத் திறன் அறிவு தேர்வு முறைகளை வைத்துள்ளது. ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி செல்லும் வரை, அவர்களுக்காக ஒரு கோப்பு உருவாக்கி, அதை பெற்றோர்களின் கவனத்தில் வைக்கவேண்டும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget