மேலும் அறிய

UKG Child : யுகேஜி மாணவியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி: தெளிவு கோரி உத்தரவிட்ட மாநில அரசு

பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது.  

பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது.  இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் 6 வயது குழந்தை என்றுகூட பாராமல் கடுமையாக நடந்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், மாணவியின் பெற்றோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பெங்களூரு அனேக்கல் டவுனின் புறநகரில் உள்ள செயின்ட் ஜோசஃப்ஸ் சாமினேட் அகாடமியில் நடந்துள்ளது. அண்மையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரேங்க் கார்டு கொடுத்துள்ளனர். அதில் அவர் ஒரு பாடத்தில் 40க்கும் 5 மதிப்பெண் வாங்கியதாகக் குறிப்பிட்டு தேர்வில் ஃபெயில் எனக் கூறியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் குமார் இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை ஃபெயிலாக்கியுள்ள அந்த அற்புதமான பள்ளிக் கூடத்திற்கு நான் ஒருமுறையாக சென்று பார்வையிட விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக் கூடாது. இருந்தும் அவ்வாறாக ஃபெயிலாக்கி உள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தையின் தந்தை மனோஜ் பாதல், இவ்வாறாக 6 வயது குழந்தையை ஃபெயிலாக்கி அறிவித்துள்ளது அக்குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், நாங்கள் எந்த ஒரு மாணவனையும் ஃபெயிலாக்குவதில்லை. நாங்கள் மொபைல் செயலி மூலம் ரிசல்ட் அனுப்புகிறேன். அந்த செயலீயில் பாஸ் மார்க், ஃபெயில் மார்க் செட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு காட்டியிருக்கும். நாங்கள் யாரையும் ஃபெயிலாக்கவில்லை. இது தொடர்பாக பெற்றோருக்கு விளக்கமளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்திற்கும் ஃபெயில் மார்க் என குறிப்பிடும் ப்ரோகிராமை மாற்றுமாறும் கூறியுள்ளோம்.

இருப்பினும் சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு வட்டார கல்வி அலுவலர் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
எல்கேஜி, யூகேஜி போன்ற மழலையர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக்கூடாது என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த 2019 ஆம் ஆண்டே அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்சிஇஆர்டி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் வேலை, மழலையர் பள்ளி குழந்தைகளை தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர் என்று அடையாளப்படுத்துவற்கு இல்லை. அப்படி குழந்தைகளை அடையாளப்படுத்தினால் அவர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு மந்த நிலைக்கு செல்கிறார்கள். இதற்கு பல பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். எனவே, கல்வி முறையில், எவை எல்லாம் செய்யக்கூடாது, செய்யக் கூடியது என்று என்சிஇஆர்டி வரையறை செய்துள்ளது. அதன்படி, மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எந்தவொரு எழுத்துத் தேர்வோ, வாய்மொழி தேர்வோ நடத்தக் கூடாது. அதில், குழந்தைகளுக்கு, சமூகத்தோடு எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்து பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சுருக்கமாக எழுத, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் உள்ள பல மழலையர் பள்ளிகள், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் மற்றும் ஆங்கிலத் திறன் அறிவு தேர்வு முறைகளை வைத்துள்ளது. ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி செல்லும் வரை, அவர்களுக்காக ஒரு கோப்பு உருவாக்கி, அதை பெற்றோர்களின் கவனத்தில் வைக்கவேண்டும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
காருண்யா லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
Ramadoss: மூன்றாவது மருத்துவமனைக்கு மாற்றப்படும் ராமதாஸ் - ஆம்புலன்ஸில் சென்னை பயணம் - என்ன ஆச்சு?
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
TN Election 2026: போடுங்கம்மா ஓட்டு! இன்னும் 10 நாள்தான் இருக்கு! சுத்தி சுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள்!
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
USA Iran War: ”நீ வேணா வந்து பாரு, பேசிட்டு இருக்க மாட்டோம்” அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங் - நாரதர் வேலை
ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்! 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்! 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
Tamilnadu Roundup: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! மயங்கி விழுந்த ராமதாஸ் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! மயங்கி விழுந்த ராமதாஸ் - தமிழகத்தில் இதுவரை
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
IPL 2026: மும்பையை பொளந்துகட்டிய ஆர்சிபி..! வீக் எண்டில் ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - யாருக்கு எந்த இடம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Car Discontinued: ஒரே அடியாக 4 பட்ஜெட் கார்களின் விற்பனையை நிறுத்திய முன்னணி ப்ராண்ட் - என்ன காரணம்?
Embed widget