மேலும் அறிய

Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு

Pranab Mukherjee: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவு மண்டபம் கட்ட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Pranab Mukherjee: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதிசடங்கு நடத்த இடம் ஒதுக்கவில்லை என, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் சாடி வரும் நிலையில் இந்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம்:

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைநகர் ராஜ்காட்டில் உள்ள 'ராஷ்ட்ரிய ஸ்மிருதி' பகுதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை, செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, பிரணாப்பின்  மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ளார். தனது தந்தைக்கு நினைவிடம் உருவாக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “எனது தந்தைக்காக நினைவிடம் அமைக்கும் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமயிலான அரசுக்கு எனது இதயத்தின் மையத்தில் இருந்து நன்றி. நாங்கள் கேட்காமலே நினைவிடம் அமைக்கும் அரசின் செயல்,  பிரதமரின் உண்மையான கருணையுள்ள நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.

அரசு கடிதம்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சமாதி அமைப்பதற்காக 'ராஷ்டிரிய ஸ்மிருதி' வளாகத்திற்குள் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒதுக்கப்பட்ட இடத்தை ஒதுக்க தகுதி வாய்ந்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி இந்த இந்த கடிதம்  வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மரியாதை நிமித்தமாக பிரணாப்பின் மகள் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31, 2020 அன்று இறந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

மன்மோகன் சிங் நினைவிட குழப்பம்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26-ம் தேதி காலமானதை தொடர்ந்து,  டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் அவரது இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டடது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை அவரது நினைவிடம் கட்டப்படும் இடத்தில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியதுடன், முன்னாள் பிரதமரின் தகனம் மற்றும் நினைவிடத்திற்கு சரியான இடத்தை அரசாங்கத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.  "இது இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானத்தைத் தவிர வேறில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் அரசுக்கு பாரம்பரியங்களை நினைவூட்டுகிறது, ஆனால் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஒரு நினைவகம் கட்டவில்லை என்று பாஜக சாடியது. இதனால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் முற்றி வரும் சூழலில், பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்கும் முடிவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
Embed widget