மேலும் அறிய

ABP Cvoter 2021 MOTN Survey : விலை உயர்வு அல்ல வேலைவாய்ப்பே பிரச்னை; ABP மற்றும் சிவோட்டர் நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தேசிய அளவில் வெறும் 3.86 சதவிகிதம் பேர் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தை தீவிர பிரச்சனையாக கருதுவதாக ABP மற்றும் சிவோட்டர் நடத்திய மெகா கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் அது மாநிலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

ஊழல், அத்தியாவசிப் பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்றவைகளை கொரோனா மருத்துவ உபகரணங்களை பொது மக்கள் தற்போது நாட்டின் மிகப்பெரிய  பிரச்சினையாக கருதுகின்றனர் என ஏபிபி-சி வோட்டர் சர்வே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  

2021 MOOD OF THE NATION கருத்துக்கணிப்பு முடிவுகளை  சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி செய்தி நிறுவனம் வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று  காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் நாடு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.   

இந்திய நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகிறது. இதில் மிக முக்கிய பிரச்சனையாக நீங்கள் கருதுவது என்ன? என்ற கேள்வியும் இடம் பெற்றது. 

c16 : There are many problems that our country is facing today. Which one according to you is the most important problem?  
Channel State Corruption Unemployment Family income/Poverty Rising prices Economic status
ABP Ananda WB 2.44 16.85 2 7.65 5.48
ABP Asmita Gujarat 12.83 16.26 2.91 10.22 3.02
ABP Majha Maharashtra 9.08 13.47 4.78 14.06 0.93
ABP Sanjha Punjab 11.8 26.47 5.37 8.23 0.42
ABP Tamil Tamil_Nadu 1.08 10.27 4.05 5.26 2.51
ABP_India All_India 6.88 18.17 4.6 10.37 2.27

 

c16 : There are many problems that our country is facing today. Which one according to you is the most important problem?  
Channel State Issues related to agriculture/farmers Epidemics such as corona etc. Others Can’t say TOTAL
ABP Ananda WB 0.45 42.36 19.9 2.87 100
ABP Asmita Gujarat 1.75 37.87 12.15 2.99 100
ABP Majha Maharashtra 4.84 40.5 7.53 4.81 100
ABP Sanjha Punjab 13.31 28.63 0.46 5.31 100
ABP Tamil Tamil_Nadu 10.42 44.84 11.64 9.93 100
ABP_India All_India 3.86 35.88 11.96 6.01 57.71

         

அகில இந்திய அளவில், கொரோனா மருத்துவ உபகரணங்கள் தேசம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்சனை என்று 36 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மாநிலங்கள் அளவில் இந்த விகிதம் மாறுபடுகிறது. 

உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் மாநிலங்களான தமிழகம் (44.84%), மேற்கு வங்கம் (42.36), மகாராஷ்டிரா (40) ஆகிய மாநிலங்களில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் மிகப்பெரும் பிரச்சனையாக காணப்படுகிறது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் 6 மாதங்களுக்கு மேலாக போராடும் விவசாயிகள் போராட்டம் அகில இந்திய அளவில்  மிகமுக்கிய  பிரச்சனையாக மக்கள் பார்க்கப்பட வில்லை என்பது இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவில் வெறும் 3.86 சதவிகிதம் பேர் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தை தீவிர பிரச்சனையாக கருதுகின்றனர்.  பஞ்சாப் (13.31), தமிழ்நாடு (10.41) ஆகிய மாநிலங்கள் மட்டுமே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்   மிகமுக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. 

வேலைவாய்ப்பின்மை:   

இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட அநேக கருத்துக் கணிப்புகளில், பொது மக்களுக்கு வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. உண்மையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்  வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகள் அடிப்படையில் பெரும்பாலான இளைஞர்கள் வாக்களித்ததாக  கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் 80% இளைஞர்கள் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மையை முக்கிய பிரச்சனையாக கருதியிருந்தனர். 

ABP Cvoter 2021 MOTN Survey : விலை உயர்வு அல்ல வேலைவாய்ப்பே பிரச்னை; ABP மற்றும் சிவோட்டர் நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 ஆனால், தற்போது, வேலைவாய்ப்பின்மை மிக முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அகில இந்திய அளவில் 18.17 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளது.  

2020-21-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.11 சதவீதமாகும். 2019-20 ஆம் ஆண்டுக்கான  வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.27 சதவீதமாகும். 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.55 சதவிகிதமாக இருந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் கடும் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், அத்தியாவசிப் பொருட்களின் விலையேற்றம் போன்றவைகள் மிகமுக்கிய பிரச்சனையாக கருதப்படவில்லை.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget