மேலும் அறிய

Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்ட விழா நிகழ்வுகளின் தொகுப்பு.

நாடு முழுவதும் இன்று 76 ஆவது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது. முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து நற்சான்றிதழ் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.



Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

நாட்டின் 76வது சுதந்திரதின பவளவிழாவை  முன்னிட்டு  மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று  மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை  மாவட்ட ஆட்சியர் லலிதா ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 93 அரசு அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனை அடுத்து 51 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

 

மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் 76ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு இன்று இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பிரதிநிதிகள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கிராம நாட்டான்மைகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், சபீர் அகமது மற்றும் சாலமன் ஆகிய மூவரும் இணைந்து மூவர்ண கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின நன்னாளில் மத வேற்றுமைகளை மறந்து அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது.

தேசத் தலைவர்கள் வேடமணிந்து நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய சுதந்திர தின ஊர்வலம்.


Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

இந்திய திருநாட்டின் சுதந்திரத் திருவிழா அமுதப் பெருவிழாவான இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் தேச விடுதலைக்காக பாடுபட்ட அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜ் கொடிகாத்த குமரன் சுப்ரமணிய சிவா, கண்ணியமிக்க காயிதே மில்லத் போன்றவர்கள் போல வேடமிட்டு ஊர்வலம் நடைபெற்றது. மயிலாடுதுறை பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து நடத்திய இந்த பேரணி நகராட்சி பூங்காவில் இருந்து துவங்கியது. நையாண்டி மேளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி பொதுத்தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலையில் செல்போர்கள் தேசத்தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்கள் உற்சாகம். 


Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர பவள விழா ஆண்டையொட்டி அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டன. செம்பனார்கோயிலை அடுத்த காளகஸ்திநாதபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பள்ளித்தாளாளர் என்.எஸ்.குடியரசு தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், மா.பொ.சி, பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடமடைந்த மாணவர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இன்று காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

சட்டமன்ற அலுவலகங்கள் அரசுத்துறை அலுவலகம் பள்ளிக் கல்வி நிலையங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை. 


Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை அடுத்து மயிலாடுதுறை பல்வேறு அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் செல்வராஜ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியேற்றினார். சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாயவரம் கூட்டுறவு நகர வங்கியில் அதன் தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பாஜக மாவட்ட ஓபிசி அணி சார்பில் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்  காளிதாஸ் தேசியக்கொடியை ஏற்றினார்.


Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!

இதில் பங்கேற்ற பாரதமாதா வேடம் அணிந்த குழந்தை பார்வையாளர்களை கவர்ந்தது. முன்னதாக பாஜக ஓபிசி  அணியினர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  தியாகி நாராயணசாமி  நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மாணவர்கள் முன்னிலையில் கொடியேற்றினார். அங்கு மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரை, உப்பு சத்தியாகிரக போராட்டம் டாக்டர் அம்பேத்கர் கர்மவீரர் காமராஜர் போன்ற பல்வேறு தியாக தலைவர்களின் புகைப்பட கண்காட்சிகள் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோன்று மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் சுமார் 75 மீட்டர் மெகா தேசிய கொடியினை பேரணியாக எடுத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget