மேலும் அறிய

மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. கட்டிப்பிடித்தவாறே இறந்த குடும்பம்..

மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துணி எடுக்கும்போது மின்சார தாக்குதல்:

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலனி உள்ளது. அங்கு அகமது மற்றும் பர்வீன் தம்பதியினர் மற்றும் இவர்களது மகன்கள் அத்னான் மற்றும் மஹீம் ஆகிய 4 பேரும் வசித்து வந்தனர். துவைத்த துணியை குடிசைவீட்டின் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காயவைத்துள்ளார். மின்சார கசிவு ஏற்பட்டு இந்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதனை அறியாத பர்வீன் காய வைத்த துணியை எடுக்கச் சென்றிருக்கிறார். துணிகளை எடுத்த போது கம்பியின் மீது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

4 பேர் உயிரிழந்த பரிதாபம்:

இதனால் அலறித் துடித்த பர்வீனை அவரது கணவர் அகமது பிடித்து இழுத்துள்ளார். ஆனால், அகமதுவும் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானார். இருவரும் அலறித்துடிப்பதைப் பார்த்த இரண்டு மகன்களும் பெற்றோர்களை ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய 4 பேரும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. கட்டிப்பிடித்தவாறே இறந்த குடும்பம்..

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் மீது மின்சாரம் பாய்கிறது என்று தெரிந்தவுடனேயே மின்னோட்டத்தை முதலில் நிறுவ வேண்டும். பிறகுதான் மின் தொடர்பில் இருப்பவரை அப்புறப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு மின்சாரம் பாயும்போது பிடித்தால் காப்பாற்றச் செல்பவர் மீதும் மின்சாரம் பாயும். அல்லது தடித்த நீண்ட உலர்ந்த மரக்கட்டையால் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் நபரை மின் தொடர்பில் இருந்து அகற்ற வேண்டும். காலில் ரப்பர் செருப்போ அல்லது ரப்பர் பாய், மரப்பலகை போன்றவற்றில் நின்றுகொள்வது நல்லது. மின்சாரம் பாயாத அட்டை போன்றவற்றைக் கொண்டும் பாதிக்கப்பட்டவரை அகற்றலாம். காப்பாற்றச் செல்பவருக்கு தரை மற்றும் சுவருடன் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக காப்பாற்றச் செல்பவர் மீது ஈரம் இருக்கக் கூடாது. கையில் கிடைக்கிறது என்று உலோகம் மற்றும் முலாம் பூசப்பட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

உணர்ச்சிவயப்பட்டு பதற்றத்தில் முன் யோசனை இல்லாமல் காப்பாற்றச் சென்றால், காப்பாற்றச் செல்பவரும் உயிரிழக்கவோ அல்லது தீவிரமான காயங்களோ அடையக் கூடும். 

கட்டிப்பிடித்தபடியே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருப்பது தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget