மேலும் அறிய

Dibrugarh University: திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்: மாடியில் இருந்து குதித்த மாணவன்: 18 மாணவர்கள் வெளியேற்றம்

திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்கில் இருந்த தற்காத்துக்கொள்ள மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்த விவகாரத்தில், 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாம் மாநிலத்தில்,  திப்ருகர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்கு வணிகவியல் பிரிவில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மாவை  மூத்த மாணவர்கள் ரேகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.  நவம்பர் 26ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையில் தொடர்ந்து ரேகிங் செய்யப்பட்டதால் மனமுடைந்த  ஆனந்த் சர்மா, விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது படுகாயமடைந்த அவர் சக மாணவர்களால் அருகே இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆனந்த் சர்மாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மீது நடவடிக்கை:

இதனிடையே,  மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின்  முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும்  தற்போது அங்கு பயின்று வரும்  மாணவர்கள் 4 பேர் என 5 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். அதைதொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில், ரேகிங்கில் ஈடுபட்டதாக 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் விசாரணை முடியும் வரை பல்கலைக்கழக வகுப்புகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக தொடர்ந்த ரேகிங்:

சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மாவின் தாயார்,  கடந்த ஒரு மாதமாக எனது மகன் விடுதியில் ரேகிங்கால் பாதிக்கப்பட்டுள்ளான். தினமும் செல்போன் மூலம் எங்களை தொடர்பு கொண்டு  உடல் மற்றும் மனரீதியாக அனுபவித்த கொடுமைகளை கூறுவான். அதைதொடர்ந்து எங்களின் ஆலோசனையின்படி, கடந்த நவம்பர் 17ம் தேதி 10 மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக  விடுதியின் வார்டனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தான். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகன் மாடியில் இருந்து குதித்த பிறகு, ஆனந்த் சர்மா குளியலறையில் விழுந்து காயம் அடைந்துவிட்டதாக தான் மாணவர் ஒருவர் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறினார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை:

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தனது மகனை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், பணத்தை கொள்ளையடித்து, மொபைலை பறித்துச் சென்றதாகவும் மாணவரின் தாய் தெரிவித்துள்ளார். தனது மகனின் கையில் மது மற்றும் போதைப்பொருகளையும் வைத்து ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Embed widget