மேலும் அறிய

Dibrugarh University: திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்: மாடியில் இருந்து குதித்த மாணவன்: 18 மாணவர்கள் வெளியேற்றம்

திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்கில் இருந்த தற்காத்துக்கொள்ள மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்த விவகாரத்தில், 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாம் மாநிலத்தில்,  திப்ருகர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்கு வணிகவியல் பிரிவில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மாவை  மூத்த மாணவர்கள் ரேகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.  நவம்பர் 26ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையில் தொடர்ந்து ரேகிங் செய்யப்பட்டதால் மனமுடைந்த  ஆனந்த் சர்மா, விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது படுகாயமடைந்த அவர் சக மாணவர்களால் அருகே இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆனந்த் சர்மாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மீது நடவடிக்கை:

இதனிடையே,  மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின்  முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும்  தற்போது அங்கு பயின்று வரும்  மாணவர்கள் 4 பேர் என 5 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். அதைதொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில், ரேகிங்கில் ஈடுபட்டதாக 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் விசாரணை முடியும் வரை பல்கலைக்கழக வகுப்புகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக தொடர்ந்த ரேகிங்:

சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மாவின் தாயார்,  கடந்த ஒரு மாதமாக எனது மகன் விடுதியில் ரேகிங்கால் பாதிக்கப்பட்டுள்ளான். தினமும் செல்போன் மூலம் எங்களை தொடர்பு கொண்டு  உடல் மற்றும் மனரீதியாக அனுபவித்த கொடுமைகளை கூறுவான். அதைதொடர்ந்து எங்களின் ஆலோசனையின்படி, கடந்த நவம்பர் 17ம் தேதி 10 மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக  விடுதியின் வார்டனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தான். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகன் மாடியில் இருந்து குதித்த பிறகு, ஆனந்த் சர்மா குளியலறையில் விழுந்து காயம் அடைந்துவிட்டதாக தான் மாணவர் ஒருவர் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்பு. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறினார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை:

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தனது மகனை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், பணத்தை கொள்ளையடித்து, மொபைலை பறித்துச் சென்றதாகவும் மாணவரின் தாய் தெரிவித்துள்ளார். தனது மகனின் கையில் மது மற்றும் போதைப்பொருகளையும் வைத்து ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Embed widget