மேலும் அறிய

Shocking : 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இம்மாதிரியான சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிர மருத்துவனையில் அதிர்ச்சி:

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், தானேயில் கல்வா பகுதியில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் நடந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அபிஜித் பங்கர் கூறுகையில், "இறந்தவர்களில் 10 பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவர். அவர்களில் ஆறு பேர் தானே நகரைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் கல்யாண், 3 பேர் சஹாபூரைச் சேர்ந்தவர்கள். பிவாண்டி, உல்ஹாஸ்நகர் மற்றும் கோவண்டியை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் வேறு இடத்தை சேர்ந்தவர். ஒருவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்" என்றார்.

24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு:

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசுகையில், "மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிலைமை குறித்து கேட்டறிந்தார். சுகாதாரப் பணிகள் ஆணையர் தலைமையில், ஆட்சியர், மாநகாட்சி தலைவர், சுகாதாரப் பணிகள் இயக்குநர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டார்.

உயிரிழப்பின் காரணம் குறித்து ஆய்வு செய்ய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளிகளுக்கு சிறுநீரக கல், நாள்பட்ட பக்கவாதம், அல்சர், நிமோனியா போன்ற சிக்கல்கள் இருந்திருக்கின்றன. மண்ணெண்ணெயை குடித்த ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் வாக்குமூலம் போன்றவை பதிவு செய்யப்படும். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக சிலர் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இது தீவிரமான பிரச்னை. இதுகுறித்து விசாரணைக் குழு விசாரிக்கும்.

காரணம் என்ன?

கொரோனா மருத்துவமனை பணியாளர்கள் 500 பேர் கொண்ட குழு,  இந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கூடுதல் செவிலியர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பிரேத பரிசோதனை வசதியை ஏற்படுத்துவது எங்கள் இலக்கு" என்றார்.

முன்னதாக, இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் கூறுகையில், "இரண்டு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனையின் டீன் கேட்டுக் கொள்ளப்பட்டார்" என்றார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் கணேஷ் கவ்டே, "கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு வழக்கமாக ஆறு முதல் ஏழு பேர் உயிரிழப்பார்கள் என எங்களிடம் மருத்துவனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் இங்கு வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கூறியது. சிலர் வயதானவர்கள். இந்த அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.