மேலும் அறிய

பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அரியவகை உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கடல் பகுதியில் பாசிப்படலங்கள் அதிகமாக உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள உயிரினங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.


பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

கடந்த மாதம் தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடல் பச்சை நிறமாக காட்சி அளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாசிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று மீண்டும் புதிய துறைமுகம் கடற்கரையில் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிக்கு வந்த மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.


பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

இது குறித்து தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல்ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி திரவியராஜ் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் முறையாக மண்டபம் பகுதியில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த நுண்ணுயிர் பாசிப்படலம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே கீழக்கரை பகுதியில் மீன்கள் செத்து ஒதுங்கின. இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியிலும் நுண்ணுயிர் பாசிப்படலம் பரவத் தொடங்கி இருக்கிறது.


பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

இது நாக்டிலுகா என்ற நுண்ணுயிர் கடல் பாசி ஆகும். இந்த பாசி அதிக அளவில் ஆக்சிஜனை எடுத்து வேகமாக பல்கி பெருகும். இதனால் கடல் பச்சை நிறமாக காட்சி அளிக்கும். அதே நேரத்தில் கடலில் உள்ள ஆக்சிஜனை எடுத்துவிடுவதால், அந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். ஒரு வாரத்துக்கு மேல் பாசிப்படலம் ஒரே இடத்தில் இருந்தால், அந்த பகுதியில் உயிரினங்களுக்கு உயிரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிக காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ இந்த பாசிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அடித்து செல்லப்பட்டு விடும். வழக்கமாக அக்டோர் மாதம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்த பாசிப்படலம் நீடித்து வருகிறது என்று தெரிவித்தார்.


பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் வாழும் அரியவகை பச்சை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உயிர்கோள காப்பக அலுவலர்கள், ஆமை அடிப்பட்டு இறந்ததா அல்லது கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உயிரிழந்ததா என பரிசோதனை செய்தனர். உயிரிழந்த கடல் ஆமை சுமார் 80 கிலோ எடை கொண்ட ஆண் ஆமையாகும்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
ABP Nadu Top 10, 20 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 20 June 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!
மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
Embed widget