மேலும் அறிய

கொரோனா எதிரொலி: ’’அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி’’

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் கடந்த வாரம் வரை 2,04,379 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறப்பது குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலி: ’’அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி’’
 
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளையாவது 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலி: ’’அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி’’
 
கொரோனா மூன்றாவது அலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் அளித்த உறுதி மற்றும் தைரியத்தின் காரணமாக 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை தொடங்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டுமானால் அதற்கான தயார் நிலையில் பள்ளிகளும், வகுப்பு ஆசிரியர்களும் இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
கொரோனா எதிரொலி: ’’அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி’’
 
அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இதேபோன்று கடந்த ஆண்டும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் கூடுதலாக ஏதாவது சேர்க்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இது முடிவு செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்படும்.
 
தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம் தான் வசூலிக்க வேண்டும். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குழு அமைத்து முழுமையாக விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா எதிரொலி: ’’அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அன்பில் மகேஷ் பொய்யாமொழி’’
 
 
 
கொரோனா காலத்தை முன்னிட்டு பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வரைவு தயாராகிவிட்டது. விரைவில் நான் அதில் கையெழுத்திடவுள்ளேன். அதன்பிறகு எந்தந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீதம் பாடம் குறைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். 
 
மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பதை விட வகுப்புகளுக்கு வர வேண்டும் என்பது தான் அரசின் நிலை. முதல்வரின் விருப்பமும் அதுதான். அதேநேரத்தில் 3ஆவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  சில பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் பகுதிகளில் இணைதய சேவை சரியாக இருப்பதில்லை. இதனால் ஆசிரியர்கள் ஒரு மாணவரின் வீட்டுக்கு சென்று அந்த பகுதிகளில் உள்ள நான்கைந்து மாணவர்களை சேர்த்து வைத்து பாடம் நடத்தும் பணிகளையும் செய்து வருகின்றனர். மேலும், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஏதாவது ஒரு மாணவரின் செல்போனுக்கு பாடங்களை அனுப்பி அந்த பகுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் அதனை பகிர்ந்து பாடங்களை எழுத வைக்கும் பணிகளையும் சில ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
 
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை 2,04,379 பேர் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகளை செய்தல் போன்ற பணிகளை அரசு செய்யும் என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget