மேலும் அறிய

விதிகளை மீறினால் விமானத்திலிருந்து வெளியேற்றப்படலாம்... டிஜிசிஏ புதிய உத்தரவு

பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. இதை அனைவரும் அறிவர். 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கிய மூன்று மாதங்களில் உச்சம் தொட்டு செப்டம்பர் மாதம் குறைய தொடங்கியது. சற்று நிம்மதி பெருமூச்சு விடுகையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரம் மீண்டும் பரவ தொடங்கிய மே மாதம் உச்சம் தொட்டது. 

முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை மோசமான உயிரிழப்பு சம்பவங்களை ஏற்படுத்தியது. மக்கள் கொத்து கொத்தாக உயரிழந்தனர். இது மீண்டும் குறைய தொடங்கி ஒமைக்ரான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாக, அடுத்த அடுத்த அலை உருவாகி மக்களை பதற்றத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 927 லிருந்து1,021 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34.55  லட்சத்து-க்கு மேல் அதிகரித்துள்ளது. 

இச்சூழலில், விமானங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விதியை மீறுபவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் அல்லது மூன்று மாதங்கள் வரை அவர்களை விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் பேசுகையில், "விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படும். விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். விதிவிலக்கான சூழலில் மட்டும் முகக்கவசத்தை அணியாமல் இருக்கலாம்" என்றார்.

களத்தில் கரோனா விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்றும் விமான பயணிகளுக்கு தனியாக அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த நிலையில், விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget