மேலும் அறிய

விதிகளை மீறினால் விமானத்திலிருந்து வெளியேற்றப்படலாம்... டிஜிசிஏ புதிய உத்தரவு

பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. இதை அனைவரும் அறிவர். 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கிய மூன்று மாதங்களில் உச்சம் தொட்டு செப்டம்பர் மாதம் குறைய தொடங்கியது. சற்று நிம்மதி பெருமூச்சு விடுகையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரம் மீண்டும் பரவ தொடங்கிய மே மாதம் உச்சம் தொட்டது. 

முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை மோசமான உயிரிழப்பு சம்பவங்களை ஏற்படுத்தியது. மக்கள் கொத்து கொத்தாக உயரிழந்தனர். இது மீண்டும் குறைய தொடங்கி ஒமைக்ரான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாக, அடுத்த அடுத்த அலை உருவாகி மக்களை பதற்றத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 927 லிருந்து1,021 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34.55  லட்சத்து-க்கு மேல் அதிகரித்துள்ளது. 

இச்சூழலில், விமானங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விதியை மீறுபவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் அல்லது மூன்று மாதங்கள் வரை அவர்களை விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் பேசுகையில், "விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படும். விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். விதிவிலக்கான சூழலில் மட்டும் முகக்கவசத்தை அணியாமல் இருக்கலாம்" என்றார்.

களத்தில் கரோனா விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்றும் விமான பயணிகளுக்கு தனியாக அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த நிலையில், விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget