மேலும் அறிய

கும்பகோணம் : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் நேற்று காலை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி வள்ளிக்கண்ணு (40) தடுப்பூசி செலுத்துக் கொள்ளவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
 
கொரோனா தொற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகம் பரவி வருவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும், 6069 நபர்கள் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் குறைக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது. 
 
ஐந்து நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றதால், ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அதன்படி கும்பகோணம் பகுதியில் உள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி நகராட்சி பள்ளி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் மையங்களில் காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்டனர். 

கும்பகோணம் : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
இதனால் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில்  காலை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி வள்ளிக்கண்ணு (40) தடுப்பூசி செலுத்துக் கொள்ளவதற்காக  வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வள்ளிக்கண்ணு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் விரைந்து வந்து வள்ளிக்கண்ணுவை பரிசோதித்தனர். இதில் வள்ளிக்கண்ணு இறந்துவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
பின்னர் அங்கு வந்த வள்ளிக்கண்ணுவின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் கிராமப்புறங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படுவதை சுகாதாரத்துறையினர் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!
மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!
கம்யூட்டர், லேப்டாப், சேர், ஏசி என எதையும் விடாதீங்க... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சியில் பணியாளர்கள் !
கம்யூட்டர், லேப்டாப், சேர், ஏசி என எதையும் விடாதீங்க... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சியில் பணியாளர்கள் !
ABP Nadu Top 10, 19 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 19 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget