தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 583, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேர் என 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 88 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா
சென்னையில் ஏற்கெனவே ஆயிரத்து 977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாயிரத்து 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு
கொரோனா காரணமாக இன்று 22 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 41,000-ஐ தாண்டியது
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் இரண்டாயிரத்து 314 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets