மேலும் அறிய

TN Metro Rail: கோவை, மதுரைக்கு எதுக்கு மெட்ரோ ரயில்? திட்டத்தை குப்பையில போடுங்க, பஸ்ஸே போதும் - மத்திய அரசு

TN Covai Madurai Metro Rail: கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.

TN Covai Madurai Metro Rail: கோவை மற்றும் மதுரைக்கு விரிவான போக்குவரத்து திட்டமே போதுமானது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு:

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நிராகரித்துள்ளது. 2017ம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கோவை மற்றும் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர மெட்ரோ ரயில் திட்டம் உகந்ததாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாகும்.

மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மெட்ரோ ரயில் கொள்கையின் கீழ், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மட்டுமே பெருமளவிலான மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு தகுதியானவை என கருதப்படுகிறது. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூரில் சுமார் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் சுமார் 15 லட்சம் பேரும் மட்டுமே இருந்தனர் என கூறி, அந்த நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் பரிந்துரைகள் என்ன?

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக மாற்றுப் போக்குவரத்து முறைகளை ஆராய வேண்டும் என்ற ஆலோசனையுடன் திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ”மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை என்பதையும், நீண்டகால நிலைத்தன்மைக்கு கவனமாக திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு, செலவு குறைந்த பிற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள் - வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS - மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைகள் இத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன”என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

வெடிக்கும் குற்றச்சாட்டுகள்...

அதேநேரம், 20 லட்சம் மக்கள் தொகை இல்லாத பல நகரங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதாரணமாக  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 லட்சம் பேரை மட்டுமே கொண்ட ஆக்ராவிற்கு 2019 ஆம் ஆண்டில் மெட்ரோ திட்டம் அனுமதிக்கப்பட்டது. அதேபோல், போபாலின் மக்கள் தொகை 19.17 லட்சம் ஆக மட்டுமே இருந்த நிலையில் அங்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், எதிர்க்கட்சியான திமுக ஆட்சி நடைபெறுவதால் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில் திட்டங்களை ஒதுக்க மத்திய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

15 ஆண்டு கால காத்திருப்பு..

2010 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயிலுக்கு ஏற்ற நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூரை மத்திய அரசு அடையாளம் கண்டது. தொடர்ந்து , கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் மாநில அரசு சமர்ப்பித்தது. அதன் பிறகு விரிவான இயக்கத் திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கையை டிசம்பர் 2024 இல் சமர்ப்பிக்கப்பட்டது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள மத்திய அரசின் அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கோவை மக்கள் அதிருப்தி...

2011 க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது யார் தவறு? கோயம்புத்தூர் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளதாகவும், மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 40 லட்சத்தை கடந்து இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களான ஜெய்ப்பூர், கொச்சி மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. ஆனால், கோவை மட்டும் தற்போது வஞ்சிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மக்கள் தொகையில் மட்டுமின்றி, ஐடி மற்றும் உற்பத்தி என பலதரப்பட்ட தொழில்துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது காலத்தின் கட்டாயம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
Embed widget