மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனிடம் சிபிசிஐடி விசாரணை

கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த போது சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததாக விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இதுவரை 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள், டவர் லொக்கேஷன், அடங்கிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், அத்தகவல் கிடைத்தால் விரைவில் விசாரணை தொடங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ஸ்ரீதரன் வழக்கினை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் விபத்து குறித்து, அவ்வழியாக சென்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனான சிவகுமார் என்பவர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் சிவகுமாருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று அவர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானர். கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த போது சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததாக விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் என்பதும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
High Electricity Bills : திடீரென அதிகமாக வந்த மின் கட்டணம்.! இது தான் காரணம்.? மின்வாரியம் பரபரப்பு தகவல்
திடீரென அதிகமாக வந்த மின் கட்டணம்.! இது தான் காரணம்.? மின்வாரியம் பரபரப்பு தகவல்
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
Embed widget