மேலும் அறிய

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் விதிமீறல் ; ஈரோடு இளைஞர் சிபிஐ அதிகாரிகளால் கைது

அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட கட்டுப்பாடுகளை மீறி, தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெறுவதாகவும், அதற்காக உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கைமாறி வருவதாகவும் புகார் எழுந்தது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட (எப்.சி.ஆர்.ஏ) விதிமுறைகளை மீறி முறைகேடு செய்து இருப்பது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டது. நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட், இமச்சால பிரதேசம், தெலுங்கனா, ஆந்திரா, தமிழ்நாடு, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் இந்த சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் என்பவரை அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோவிந்தராஜன் உத்திரவிட்டார். மேலும் வாகாஷை வருகின்ற 13 தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் உத்திரவிட்டார். கைது செய்யப்பட்ட வாகாஷை அழைத்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லி புறப்பட்டனர்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பல தொண்டு நிறுவனங்கள், சேவை செய்தவற்கு பயன்படுத்தாமல் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி, சில தொண்டு அமைப்புகள் தங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட கட்டுப்பாடுகளை மீறி, பல தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற்று வருவதாகவும், அதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறி வருவதாகவும் புகார் எழுந்தது. 

உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வலர்கள், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 36 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 6 அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை  சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 3.21 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Israel Iran War US Order: ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran War US Order: ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
Embed widget