மேலும் அறிய

கோவையில் ஜூன் 15 ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா; மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் 15ந் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரின் பெரும் முயற்சி காரணமாக இந்தியா முழுவதும் அருமையான கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் மிகப் பெரிய வெற்றி  பெற்று இருக்கிறது. பாஜக மத்தியில் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் உள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டணி அமைவதற்கு முதல்வர் தான் காரணம்.

வெற்றிக்கான காரணம்

தமிழ்நாட்டில் 40 இடங்களையும் பாண்டிச்சேரி சேர்த்து திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் கூறினார். மக்களுடைய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையில் இந்த வாக்குறுதிகளை கொடுக்கிறேன் என முதல்வர் தெரிவித்தார். சட்டதிட்டங்களுக்கு மாறாக வாக்குகளை பெறுவதற்கு எந்த முயற்சியும் எங்களுடைய கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் எடுக்கவில்லை. வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. நம்முடைய தமிழ்நாட்டில் வலுவாக இருந்தும் எந்தவிதமான சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல் இந்த தேர்தலில் நடத்தி முடித்துள்ளோம். மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகள் கொடுத்துள்ளார்கள்.


கோவையில் ஜூன் 15 ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா; மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

மூன்று ஆண்டுகளில் முதல்வர் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிலைத்து நின்றுள்ளது. இதுதான் முக்கியமான வெற்றிக்கு காரணம். திமுகவைச் சார்ந்த அடிமட்ட எந்த பதவியும் இல்லாமல் கழகத் தோழர்கள், சகோதரிகள் பொறுப்புகளில் உள்ள நண்பர்கள் அத்தனை பேரும் கடுமையாக உழைத்து, ஓய்வில்லாமல் உழைத்த உழைப்பு தான் இன்றைக்கு மாபெரும் வெற்றி நமக்கு கொடுத்துள்ளார்கள்.

தேதி மாற்றம்

மக்களிடம் திமுக திட்டங்களிடம் கொண்டு சென்றதன் காரணமாக மாபெரும் வெற்றியை நாம் மக்கள் நமக்கு கொடுத்துள்ளார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு இடமாக போய் இடமாக சென்று நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சட்டமன்றம் நடக்கின்ற காரணத்தினால் முதலில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை போட்டு மக்களுக்கு நன்றியை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் இருக்கிறது.  மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கடமையோடு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் சின்ன சரிவு ஏற்பட்டாலும் கூட முதல் கூட்டத்தை கோவையில் போட்டார்கள்.  அப்படிப்பட்ட தலைவர் கோவை மாவட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த முப்பெரும் விழா அமைந்துள்ளது. 14 ஆம் தேதி நடைபெற இருந்த விழா, மழையின் காரணமாக 15 ம் தேதிக்கும், கொடிசியா மைதானத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த முப்பெரும் விழா சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமா என என்ற கேள்விக்கு, ”2026 அடித்தளம் போட்டு வெகு நாட்கள் ஆனது இது தேர்தலை நோக்கி அல்ல, மக்களை நோக்கிய பயணம் என்றார். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget