Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Power Shutdown February 20,2025: கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Power Shutdown: கோவையில், பிப்ரவரி 20 ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
கோவையில் நாளை மின்தடை: 20-02-2025
இந்நிலையில், கோயம்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: பிப்.20 ( வியாழன்)
எஸ்.என்.பாளையம்:
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நாகை ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 20 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!