மேலும் அறிய

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது - கோவையில் பரபரப்பு

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கோவையில் உள்ள இலங்கையை சார்ந்த டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அண்மையில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையினர் படகை வைத்து மோதியதில் தமிழ்நாடு மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கோவையில் உள்ள இலங்கையை சார்ந்த டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை அனைத்து கட்சியினர் சார்பில் காந்திபுரம் அருகே கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகலை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பொருளாதார தடை விதிக்க வேண்டும்

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ”கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், சுட்டுக் கொல்வதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் தமிழக மீனவர்கள் இருவரை கொலை செய்த இலங்கை கடற் படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது தமிழக அரசும், மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசு. தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. இது கண்டனத்திற்குரியது. உடனடியாக தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்து உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.