மேலும் அறிய

'யோகா என்பது இந்தியாவால் கொடுக்கப்பட்ட கொடை’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தென் பிராந்திய விமானப்படை தளங்களின் தலைமை ஏர்கமெண்டர் இன்டூரியா, நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்த யோகா தினத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் யோகாவை கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் மேல்தட்டு முதல் அடித்தட்டு மக்கள் வரை யோகா தினத்தை இன்று கொண்டாடினார்கள். உலகளவில் யோகா என்பது இந்தியாவால் கொடுக்கப்பட்ட கொடை. ஒன்றுபட்ட இந்தியா கலாச்சாரம் என்ற அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள நீர் ஆதாரங்கள் மூல ஆதாரங்கள் ஆற்றங்கரை நதி ஓரங்களில் பண்பாடு வளர்ந்தது.


யோகா என்பது இந்தியாவால் கொடுக்கப்பட்ட கொடை’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

வசிஷ்டர், விசுவாமித்ரர் போன்றவர்கள் யோக கலைகளை முறைப்படுத்தி கொடுத்ததால் தான், அக்கலைகள் இன்றும் அழியாமல் இருந்து வருகிறது. குருவைப் மதிக்கும் பழக்கம் யோகாவின் மூலம் கிடைக்கும். மன ஒருமைப்பாடு என்பது யோகக் கலைகள் மூலம் தான் கிடைக்கும் எனவும், யோகக் கலைகள் மூலம் மகாத்மா காந்தி, குருநானக், விவேகானந்தர் போன்றவர்கள் மன வலிமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள்” என அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், ”இந்த மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் கிட்டத்தட்ட 28,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 320 கோடிப் பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை.


யோகா என்பது இந்தியாவால் கொடுக்கப்பட்ட கொடை’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான நீண்ட கால பயன் பெறக்கூடிய  திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு குடிமக்களின் ஆதரவு மிக மிக அவசியம். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுகிய கால திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற நினைக்கின்றனர். மக்களும் அதேபோல் சின்னச்சின்ன விஷயங்களைத் தான் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். ஆனால் இப்போது தான்  முதல் முறையாக மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளனர்” என அவர் தெரிவித்தார். இதையடுத்து கோவை - அவிநாசி சாலை வழியாக ஈஷா யோகா மையம் சென்ற ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget