மேலும் அறிய

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; அழுத ஆணையர்

கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ மிரட்டியதால் கமிஷனர் அமுதா பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள் வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தனது ஆதரவாளர்களுடன் வந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் நகராட்சி ஆணையாளர் அமுதாவின் அறைக்குச் சென்று அவரிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.அப்போது, அவர் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே கமிஷனர் எம்எல்ஏ மிரட்டியதால் பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது,எம்எல்ஏ மிரட்டியதால் இருக்கையில் இருந்து எழுந்து அழுது கொண்டிருந்த கமிஷனரை சமாதானப்படுத்தி நகராட்சி தலைவரும், துணைத் தலைவரும் மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் கமிஷனர் அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்தே மீண்டும் வந்தார்.

அப்போது, எம்எல்ஏ ஏகே செல்வராஜ், ”நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?” என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் பேசியுள்ளார். இதனைக்கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினரை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, திமுகவினர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் எப்படி நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கமிஷனரை ஒருமையில் பேசலாம்? கமிஷனரை எவ்வாறு மிரட்டலாம்? என கேள்வி கேட்க அப்போதும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ ; அழுத ஆணையர்

வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.மேலும், அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகவல் அறிந்து வந்த இரு தரப்பினரும் நகராட்சி அலுவலக வளாகத்தில் குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ். கமிஷனர் அமுதா, நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்ளிட்டோரிடம் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதனிடையே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பணிசெய்ய விடாமல், ரகளை செய்த  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் கூறுகையில், ”நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவைச்சேர்ந்த 9 கவுன்சிலர்களின் வார்டுகளில் தான் அதிகளவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. நானும், துணைத்தலைவர் அருள்வடிவும் சேர்ந்து வரும் குடியரசு தின விழா நடத்துவது குறித்து பேசுவதற்காக கமிஷனர் அறைக்கு சென்றபோது மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தான் அறைக்குள் இருக்கும்போது எப்படி வரலாம்? என ஒருமையில் பேசியது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பங்குனி உத்திரம் ஸ்டார்ட்!! பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்றம்...
பங்குனி உத்திரம் ஸ்டார்ட்!! பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்றம்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
"திமுக எங்களை நிர்பந்திக்க முடியாது" - தொகுதி பங்கீடு சர்ச்சை குறித்து முத்தரசன் விளக்கம்...
“யூத் வெற்றி கொண்டாட்டம் – கென் கருணாஸ் பேசும் அதிர்ச்சி, சிம்பு பாராட்டு!”
“யூத் வெற்றி கொண்டாட்டம் – கென் கருணாஸ் பேசும் அதிர்ச்சி, சிம்பு பாராட்டு!”
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
VCK: விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டி! திருமா அதிரடி அறிவிப்பு - எந்தெந்த தொகுதிகளில்?
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
Iran War: ஈரான் போர்.. ”பாகிஸ்தானிடம் வாய்ப்பை இழந்த இந்தியா, விஸ்வகுருவே காரணம்” மோடியை கிழித்த காங்.,
ADMK alliance AMMK : அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
அதிமுக கூட்டணியில் அமமுக.! களம் இறங்கவுள்ள தொகுதிகள் என்னென்ன.? உத்தேச பட்டியல் இதோ..
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விசிக தொகுதிப்பங்கீடு, குறைந்த தங்கம் விலை, அதிமுக மா.செ., கூட்டம் - தமிழகத்தில் இதுவரை
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Iran USA War: ”எலேய்.. சமாதானம்லே” டீலுக்கு ஓகே, ஈரானுக்கு தூது அனுப்பிய ட்ரம்ப்? சீனுக்குள் வரும் பாகிஸ்தான்?
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
Flight Accident: போர் பதற்றம்..! 125 ராணுவ வீரர்களுடன் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - ஏராளமானோர் பலி
திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
Embed widget