மேலும் அறிய

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு - அதிமுக ஐடி விங்க் நிர்வாகி கைது

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சுப்பிரமணியம் என்பவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் நேற்று அவர் பணி புரியும் அலுவலகத்திற்கு சென்ற காவல் துறையினர் சுப்பிரமணியத்தை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#அஇஅதிமுக கோவை புறநகர் (வடக்கு) மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. அக்ரி சுப்பிரமணி அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை (1/2)

— SP Velumani (@SPVelumanicbe) September 7, 2022

">

இந்நிலையில், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிரைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
coimbatore power cut: கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget