மேலும் அறிய

Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணபுரிய வாய்ப்பு வந்துள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாக பணிகளில் சேர விரும்புவோர் இன்று (மே 26) இரவு 8 மணிக்குள் இணையத்தில் பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் தீயாய் பரவிவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கும் அமலில் உள்ளதால் பாதிப்பின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவருவதால் பல இடங்களில் கொரோனா சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சியின் கீழ் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பிற்கான அழைப்பு விடுத்துள்ளது. இதில் MBBS மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் செவிலியர்களுக்கு DGNM மற்றும் பிஎஸ்சி நர்சிங் முடித்தர்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ 60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள், மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் 189 செவிலியர் பணிகள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ள நிலையில், தகுதியுள்ள நபர்கள் மருத்துவ அலுவலர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையத்திலும் மற்றும் செவிலியர் பணிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணைய பக்கத்திலும் மே 26-ஆம் தேதி அதாவது இன்று இரவு 8 மணிக்குள் பதிவுசெய்யுமாறு சென்னை மாநகராட்சி  கேட்டுக்கொண்டுள்ளது.


Doctors Nurse Vacancy | தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

இதனையடுத்து விண்ணப்பித்த நபர்களுக்கு சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை கூட்ட அரங்கில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மே 28-ஆம் தேதி பணியில்  உடனடியாக சேருமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதோடு பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கவேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல்‌ விவரங்களுக்கு What’s App Number (1. Medical Officer- 9498346492 2. Staff Nurse 9498346493) என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌ மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌ எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Embed widget