மேலும் அறிய

Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!

”அந்த கணக்கெடுப்பில் இருக்கும் எண்களை பார்த்தால் கண்கள் சுற்றும். ஆம், நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ அல்ல சென்னையில் தெரு நாய்கள் இருப்பது லட்சக் கணக்கில்”

நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக, சென்னையில் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தெருநாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!

குரைக்கும் நாய் கடிக்காதா என்ன ?

முன்பெல்லாம் குரைத்துவிட்டு நகர்ந்துப்போய்விடும் நாய்கள், இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தி துரத்தி கடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. கல் எடுத்து வீசி, விரட்டினால் இன்னும் உக்கிரமாகி துரத்தும் நாய்களின் மன நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சில பிராணி ஆர்வலர்கள் கருதுகின்றார்கள். குரைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழியெல்லாம் இப்போது செல்லாக்காசாக ஆகிவிட்ட நிலையில், குரைக்கிற நாயும் கடிக்கும் கடிக்கிற நாயும் குரைக்கும் என்ற புதுமொழி உருவாகிவிட்டது.

நாய்கள் ஜாக்கிரதை

பெரிய பங்களா வீட்டு கதவுகளில் மட்டுமே மாட்டியிருந்த “நாய்கள் ஜாக்கிரதை” போர்டை இப்போது ஒவ்வொரு தெருவிலும் மாட்டும் அளவிற்கு நாய்களின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. தெரு நாய் தானே என்று இன்று எந்த நாயையும் அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போய்விட முடியாது, இருசக்கர வாகனத்தில் சென்றாலும் நடந்து சென்றாலும் துரத்தி, துரத்தி கடிக்கும் வல்லமை பெரும்பாலான நாய்களுக்கு சமீபகாலமாக வாய்த்திருக்கிறது.

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

 அதுவும் சென்னையில் சொல்லவே வேண்டாம். குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் கடித்து குதறிய காட்சிகளையெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து அது பேசுபொருளாக ஆனபோதெல்லாம் நாய்களை மாநாராட்சி சார்பில் பிடிக்கும் முயற்சிகள் ஒரு சடங்குபோல இரண்டு நாட்களுக்கோ அல்லது ஒரு வாரத்திற்கு நடந்து முடிந்திருக்கும். ஆனால், அந்த நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு, தீவிரப்படுத்தப்படாததால் நாய்களின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

சென்னையில் இருக்கும் தெரு நாய்கள் எத்தனை தெரியுமா?

இந்நிலையில், சென்னையில் இருக்கும் தெருநாய்களை கணக்கெடுத்து அதனை அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அந்த கணக்கெடுப்பில் இருக்கும் எண்களை பார்த்தால் கண்கள் சுற்றும். ஆம், நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ அல்ல சென்னையில் தெரு நாய்கள் இருப்பது லட்சக் கணக்கில். சென்னை மாநகராட்சி புள்ளிவிவரப்படி சொல்வதென்றால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் நாய்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது.

கருத்தடை செய்வதில் மெத்தனமா ?

இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் சென்னையில் வெறும் 58 ஆயிரம் தெரு நாய்களே இருந்த நிலையில், தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாய்களுக்கு மேல் பெருகியிருக்கிறது. இதற்கு காரணமாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் என்றும் நாய்களுக்கு கருத்தடை முறையாக செய்வதில்லை என்றும் பெயருக்காக வெறும் கணக்கிற்காக மட்டுமே நாய் பிடிப்பது, கருத்தடை செய்வதும் நடக்கிறது என்று சென்னை வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த குற்றச்சாட்டு சென்னை மாநகராட்சி அறிக்கை மூலம் உண்மை என நிரூபணம் ஆகியிருக்கிறது.

அம்பத்தூரில்தான் அதிக தெருநாய்கள்

மாநகராட்சி கணக்கெடுப்பின் படி அம்பத்தூர் பகுதியில் மட்டும் 23 ஆயிரத்து 980 நாய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, மாதவரத்தில் 16 ஆயிரம் நாய்களும் சோழிங்கநல்லூரில் 16, 195 தெரு நாய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு 6 மாதத்திற்கு கருத்தடை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தாலும் அதற்குள் அவை பல்கி பெருகி இன்னும் அதிகளவில் இன பெருக்கம்  செய்துவிடும் என்பது மக்களின் அச்சமாக இருக்கிறது.

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget