மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் நடந்த கொடூர சண்டை..! போதையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

காஞ்சிபுரத்தில் அண்ணன், தம்பி இருவரை மண்டையை உடைத்து தப்பியோடி தலைமறைவாகிய குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்தனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் அருகே சலூன் கடை‌ உரிமையாளர் உட்பட இருவரை தாக்கி மண்டை உடைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் 15 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
 
காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சந்தவெளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் வினோத் (31). இவர் குஜராத்சத்திரம் அருகேயுள்ள சாலை தெரு பகுதியில் சலூன் கடை நடத்திவருகிறார். இவருடன் கடையில் அவரது தம்பி முறையான,  சித்தப்பா மகன் கார்த்தி என்பவரும், ஓரிக்கையை சேர்ந்த சிவா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் வினோத் வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சிறுகாவேரிபாக்கத்தில் அருள் கார்டன் என்கிற பகுதியில் தான் கட்டிவரும் வீட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு கார்த்திக் மற்றும் சிவாவுடன் சென்றிருக்கிறார்.
 
மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி
 
மூவரும் இணைந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று  கொண்டிருந்த நிலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விநாயகபுரம்  பகுதியில் வைத்து இவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். பின்னர் வினோத் மற்றும் கார்த்திக்-ஐ மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, பின்னர் அருகிலிருந்த சிமெண்ட் பிளாக் கற்கள் கொண்டும், செங்கற்கள் கொண்டும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
 
முதலுதவி சகிச்சைகள்
 
தாக்கலுதலுக்கு உள்ளாகிய இருவரும் இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்திருக்கின்றனர். இதனையெடுத்து இதனை கண்ட பொதுமக்கள் ஆன்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் முதலுதவி சகிச்சைகள் அளிக்கப்பட்டது.  மருத்துவர்கள் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த நிலையில், தனியார் ஆன்புலன்ஸ் மூலம்  ராமசந்திரா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
 
பாலுசெட்டி சத்திரம் போலீசார் ( Baluchetty Chatram  police ) 
 
இச்சம்பவம்‌ குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் எதற்காக தகராறு ஏற்பட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வினோத்,கார்த்திக் ஆகிய இருவரையும் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக கற்களால் தாக்கும் சிசிடிவி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
 
சலூன் கடை உரிமையாளர் வினோத் மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோரை தாக்கிவிட்டு தலைமறைவாகினர். இது‌ தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டதன் பெயரில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பிரசாந்த், பிரேம், குட்டி (எ) தினேஷ், ஆகியோரை சம்பவம் நடைபெற்ற 15 மணிநேரத்தில் பாலுசெட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget