மேலும் அறிய

மக்களே.. சென்னையை விட்டு வெளிய வந்துடாதீங்க..! புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...!

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் -  தாம்பரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 சிப்காட் பூங்காக்களில்  ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளதால், சென்னை  - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் சாலை, செங்கல்பட்டு சாலை, தாம்பரம் சாலை என அனைத்து சாலைகளிலும் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று திடீரென ஒரே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 1 மணி நேரம் காத்திருந்து கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த கடும் போக்குவரத்து நெரிசலானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நீடித்தது.

இது தவிர ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு சாலை, ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தொடர் விடுமுறை எதிரொலியாகவும் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


சென்னை - திருச்சி பிரதான சாலையிலும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து, வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன்காரணமாக குரோம்பேட்டை, தாம்பரம் ,பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பணி முடித்துவிட்டு தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் பலரும் பேருந்துகளில் செல்வதை விட்டுவிட்டு சென்னை புறநகர் ரயில்களை நாடி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget