மேலும் அறிய

மக்களே.. சென்னையை விட்டு வெளிய வந்துடாதீங்க..! புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...!

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் -  தாம்பரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 சிப்காட் பூங்காக்களில்  ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளதால், சென்னை  - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் சாலை, செங்கல்பட்டு சாலை, தாம்பரம் சாலை என அனைத்து சாலைகளிலும் கணிசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று திடீரென ஒரே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 1 மணி நேரம் காத்திருந்து கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த கடும் போக்குவரத்து நெரிசலானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நீடித்தது.

இது தவிர ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு சாலை, ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தொடர் விடுமுறை எதிரொலியாகவும் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


சென்னை - திருச்சி பிரதான சாலையிலும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து, வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன்காரணமாக குரோம்பேட்டை, தாம்பரம் ,பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பணி முடித்துவிட்டு தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் பலரும் பேருந்துகளில் செல்வதை விட்டுவிட்டு சென்னை புறநகர் ரயில்களை நாடி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget