மேலும் அறிய

Chennai Air Quality: கொளுத்தும் பட்டாசு! சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம் - அச்சச்சோ!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில்தான் பட்டாசுகள் உற்பத்தி அதிகளவில் நடப்பதால் தமிழ்நாட்டில் பட்டாசுகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. பொதுமக்களும் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கொளுத்தும் பட்டாசுகள்:

தொழிற்சாலை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் காற்றின் தரமானது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி நாட்களில் அதிகளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக நேற்று முதல் கடந்த சில நாட்களாகவே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் தீவிரமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் காற்றின் தரமானது மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் காற்று மாசு:

சென்னையில் இன்று காலை 11.27 மணி நிலவரப்படி, காற்றின் தரமானது 167 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 150க்கு மேல் சென்றாலே காற்று மாசுபாடானது மோசமாக பதிவாகியுள்ளது என்று அர்த்தம் ஆகும். சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூரில் காற்றின் மாசு அதிகமாக பதிவாகியுள்ளது. ஆலந்தூரில் காற்றின் தரமானது 182-ஆக பதிவாகியுள்ளது. அரும்பாக்கத்திலும் 165 ஆக பதிவாகியுள்ளது. 

சென்னையில் கடந்த திங்கள்கிழமை 129 ஆகவும், கடந்த செவ்வாய்கிழமை 137 ஆகவும், நேற்று 108 ஆகவும் காற்றின் தரம் பதிவானது. ஆனால் இன்று காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மட்டுமின்றி வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் மோசமான நிலையிலே பதிவாகிறது.

ஈரோடு, சேலம், கரூரில் மோசமான சூழல்:

தமிழ்நாட்டில் ஈரோட்டிலும், சேலத்திலும் காற்றின் தரம் மாசடைந்துள்ளது. ஈரோட்டில் காற்றின் தரமானது 244 ஆகவும், சேலத்திலும் 221 ஆகவும் காற்றின் தரமாகவும் பதிவாகியுள்ளது. கரூரில் 211 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் மாசற்ற தீபாவளியை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதுடன், பொதுமக்கள் தீபாவளி நாளான இன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget