மேலும் அறிய

ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஊரடங்கை காரணம் காட்டி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் திருவண்ணாமலையில் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 236  குழந்தை திருமணங்கள்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் 181 திருமணங்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையை அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக அனுமதிக்க பட்டுள்ளோம் . அதே போன்று இந்த வருடம் ஆறுமாத காலத்தில் 105  குழந்தை திருமணம் நடைப்பெற்ற இருந்தது இதில் 55 திருமண்ங்கள்  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திருமணங்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணங்கள் தற்போது கொரோனா தொற்று வைரஸ் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது . ஊரடங்கு காலத்தில் பெண்குழந்தைகளின் பெற்றோர்கள் வேலையின்மை காரணத்தாலும்  வருமைகாரணத்தாலும் நடைபெறுகின்றது. இதனால் குழந்தைகள் வீட்டிலேயே உள்ளதாலும் , இதில் பெரிய பங்காக அப்பா அல்லது அம்மா இழந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் ஒரே குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பெண்குழந்தைகள் இருப்பதால் பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் இதுபோன்ற குழந்தை திருமணங்களை நடத்துகின்றனர். இதில் குறிப்பாக மாசி, பங்குனி, சித்திரை முகூர்த்த மாதங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றது. 

மேலும்  இதனை தடுக்கு முயற்சிக்கவும் முழுவதும் குழந்தைகள் திருமணங்களை  கட்டுப்படுத்துவதற்கான  முயற்சிகளை சமூகநலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. முகூர்த்த நாட்களில் குழந்தை திருமணம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குழந்தை திருமணம் நடைபெறுவதை அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

 


ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 


குழந்தை திருமணம் உள்ளதால் கர்ப்பப்பை முழுவளர்ச்சியடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும், தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் ரத்த சோகை உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு படிப்பறிவு பொது அறிவு போன்றவை ஏற்படுகிறது இதனால் பாலியல் ரீதியான பிரச்சனைகள் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம்விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்ணிற்கு 18 வயதும் ஆணிற்கு 21 வயதும் நிறையாத நிலையில் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006ன்படி குழந்தை திருமணம் என்பது ஜாமீன் வழங்கா குற்றமாகும் குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2ம் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதேபோல் 21 வயது நிறைவடையாத ஆண்மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடத்தியவர் நடத்த தூண்டியவர் என அனைவரும் குற்றவாளிகள்.


ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 

பெண் குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் காப்பாளர் மற்றும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்த பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

அச்சகங்களுக்கு கட்டுப்பாடு

திருமண பத்திரிகை அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள் மணமக்களின் வயதுச்சான்றை சரிபார்த்து பெண்ணிற்கு 18 வயது மற்றும் ஆணிற்கு 21 வயது நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்த பின்னரே திருமண பத்திரிகை அச்சடிக்க வேண்டும். 

மேலும் திருமண மண்டப உரிமையாளரும் வயது உறுதி செய்த பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தகவல் அறிந்தால் பொதுமக்கள் அதுபற்றி உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ஒன்றரை ஆண்டில் 341 குழந்தை திருமண ஏற்பாடுகள்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட சமுக நல அலுவலகம், காவல்துறை ஆகிய அலவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும்.

 எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் குழந்தை திருமணம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
Chickenpox ; குழந்தைகளை காக்க தடுப்பூசி அவசியம் !! எச்சரிக்கை கொடுக்கும் மருத்துவர்கள்
Chickenpox ; குழந்தைகளை காக்க தடுப்பூசி அவசியம் !! எச்சரிக்கை கொடுக்கும் மருத்துவர்கள்
பெரம்பூர் VIP தொகுதி இல்லை !! விஜய் குறித்து அன்புமணி குற்றச்சாட்டு !! சூடு பிடிக்கும் தேர்தல்
பெரம்பூர் VIP தொகுதி இல்லை !! விஜய் குறித்து அன்புமணி குற்றச்சாட்டு !! சூடு பிடிக்கும் தேர்தல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
TN Election 2026: இன்றே கடைசி..! படையெடுக்கும் பாஜக, காங்., வேட்பாளர்கள் - வேட்புமனு தாக்கல் எந்த தொகுதியில் டாப்?
Trump Iran War: “மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்“-ஈரான் வார்னிங்; ஹார்முஸை திறக்க நிபந்தனை - அது என்ன.?
“மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்“-ஈரான் வார்னிங்; ஹார்முஸை திறக்க நிபந்தனை - அது என்ன.?
US Iran War Fuel Crisis: கடும் எரிபொருள் தட்டுப்பாடு; ‘Work from Home‘ உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு; எங்கெங்க தெரியுமா.?
கடும் எரிபொருள் தட்டுப்பாடு; ‘Work from Home‘ உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு; எங்கெங்க தெரியுமா.?
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
Embed widget