Chennai Fog: மாறும் சென்னை வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு எப்படி இருக்கும் ?
Chennai Weather Updates: சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை வெளுத்த வாங்கிய நிலையில், அடுத்த 2 நாட்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை வானிலை :
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இங்கு, அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் வேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அதிகாலை பொழுதில் வெளியே செல்பவர்கள் குளிரிலிருந்து பாதுகாப்புதற்கான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
வடகிழக்கு பருவமழை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது, வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிடும். தற்போது ஜனவரி மாதம் 15 வரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலையானது எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
தமிழ்நாட்டின் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்:
02-01-2025 இன்று:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-01-2025: நாளை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
04-01-2025 முதல் 06-01-2025 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-01-2025 மற்றும் 08-01-2025:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















