மேலும் அறிய

பெங்களூர் குட்கா புரோக்கர் சென்னையில் கைது !! போலீஸ் அதிரடி - பரபரப்பு திருப்பம்

பெங்களூருவில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா புரோக்கர் கைது

350 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல் - குட்கா புரோக்கர் கைது

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தமிழ் நகர் 7 - வது பிளாக் 181 வது தெரு பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் கடந்த 9 ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் இருந்து சுமார் 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 181 வது தெருவை சேர்ந்த சல்மான் ஷெரீப் ( வயது 36 ) என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் படி சல்மான் ஷெரிப் பெங்களூரு சென்று 350 கிலோ குட்கா பொருட்களை வாங்கி வந்து அதில் 250 கிலோவுக்கு மேல் குட்கா பொருட்களை ஊத்துக் கோட்டையில் விற்பனை செய்து விட்டு மீதி 68 கிலோ குட்கா பொருட்களை வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது. 

மேலும் இவருக்கு குட்கா பொருட்களை பெங்களூருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிவக்குமாரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சல்மான் ஷெரிப்பிடம் இருந்து சிவக்குமார் பற்றிய தகவல்களை வாங்கி தங்களுக்கு குட்கா பொருட்கள் வேண்டும் பணத்தை சென்னையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பி சிவகுமார் கொடுங்கையூர் பகுதிக்கு வந்த போது மறைந்திருந்த கொடுங்கையூர் போலீசார் சிவக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் பெங்களூர் தீபாஞ்சலி நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ( வயது 44 ) என்பதும் இவர் பெங்களூருவில் பல இடங்களில் குட்கா பொருட்களை வாங்கி அதை தமிழகத்திற்கு விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.  இதனையடுத்து சிவக் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த நபர் கைது

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணன் தெரு சந்திப்பு பகுதியில் இரண்டு கும்பல் சண்டை போட்டுக் கொள்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். 

அதில் கல்லறை தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற கபாலி ( வயது 21 ) என்பவரிடமிருந்து 19 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவரை பிடிக்கும் போது இவருடன் இருந்த விஜய் என்ற நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வெங்கடேசன் என்ற கபாலியிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்ததும் , விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடேசன் என்கின்ற கபாலி மீது வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget