மேலும் அறிய

பெங்களூர் குட்கா புரோக்கர் சென்னையில் கைது !! போலீஸ் அதிரடி - பரபரப்பு திருப்பம்

பெங்களூருவில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா புரோக்கர் கைது

350 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல் - குட்கா புரோக்கர் கைது

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தமிழ் நகர் 7 - வது பிளாக் 181 வது தெரு பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் கடந்த 9 ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் இருந்து சுமார் 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 181 வது தெருவை சேர்ந்த சல்மான் ஷெரீப் ( வயது 36 ) என்ற நபரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் படி சல்மான் ஷெரிப் பெங்களூரு சென்று 350 கிலோ குட்கா பொருட்களை வாங்கி வந்து அதில் 250 கிலோவுக்கு மேல் குட்கா பொருட்களை ஊத்துக் கோட்டையில் விற்பனை செய்து விட்டு மீதி 68 கிலோ குட்கா பொருட்களை வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது. 

மேலும் இவருக்கு குட்கா பொருட்களை பெங்களூருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கொடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சிவக்குமாரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சல்மான் ஷெரிப்பிடம் இருந்து சிவக்குமார் பற்றிய தகவல்களை வாங்கி தங்களுக்கு குட்கா பொருட்கள் வேண்டும் பணத்தை சென்னையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பி சிவகுமார் கொடுங்கையூர் பகுதிக்கு வந்த போது மறைந்திருந்த கொடுங்கையூர் போலீசார் சிவக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் பெங்களூர் தீபாஞ்சலி நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ( வயது 44 ) என்பதும் இவர் பெங்களூருவில் பல இடங்களில் குட்கா பொருட்களை வாங்கி அதை தமிழகத்திற்கு விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.  இதனையடுத்து சிவக் குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த நபர் கைது

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணன் தெரு சந்திப்பு பகுதியில் இரண்டு கும்பல் சண்டை போட்டுக் கொள்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். 

அதில் கல்லறை தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற கபாலி ( வயது 21 ) என்பவரிடமிருந்து 19 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவரை பிடிக்கும் போது இவருடன் இருந்த விஜய் என்ற நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வெங்கடேசன் என்ற கபாலியிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்ததும் , விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வெங்கடேசன் என்கின்ற கபாலி மீது வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Embed widget