மேலும் அறிய

Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”

Mayor Priya: சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகள் இம்மாதம் முதல் சரி செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Mayor Priya: சென்னையில் சாலைகளை சீரமைப்பதாக மேற்கொள்ளப்படும் ”பேட்ச் ஒர்க்” வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சாலை விபத்துகளில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்:

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்களின்படி,  2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 49,844 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 14,527 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த 55,682 விபத்துகளில் 15,384 பேர் உயிரிழக்க, 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 64,105 சாலை விபத்துகளில் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர்.  இப்படி தேசிய அளவில் சாலை விபத்துகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. மாவட்ட அளவில் 2023 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோவையில் தலா 3,642 விபத்துகள் பதிவான நிலையில், சென்னையில் 500 பேரும், கோவையில் 1,040 பேரும் விபத்துகளில் பலியானதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் கவனக்குறைவு மட்டுமே காரணமல்ல. மோசமான சாலைகளும் உயிரை பறிக்கும் விபத்துகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, விபத்துகளை குறைக்கவும் உயிரிழப்புகளை தடுக்கவும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மேயர் பிரியா சொல்வது என்ன?

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் சாலைகள் குண்டும் குழியமாக மாறிவிடுகிறது, மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பகுதிகள் கண்டறியப்பட்டு 3 பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாகவே சாலை போட்டு வருகிறோம் தற்போது தான் மழை முடிந்திருக்கிறது இந்த மாதம் முதல் சாலைகள் போடப்படும்” என தெரிவித்துள்ளார்.

பலன் தராத ”பேட்ச் ஒர்க்”

சென்னையின் பல பிரதான சாலைகள் கூட, முழுமையாக மறுசீரமைக்கப்படாமல் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டே காணப்படுகிறது. இந்த பேர்ச் ஒர்க்கால் சாலைகள் சீராகிறதா? என கேட்டால் இல்லை என்பதே பொதுமக்களின் பதிலாக உள்ளது. மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறுகிறது என்றால், பேட்ச் ஒர்க்கால் சாலைகள் மேடும் பல்லமுமாக உருப்பெறுகின்றன. இரவு நேரங்களில் அல்லது முதல்முறையாக ஒரு சாலையில் பயணிப்பவர்கள், இந்த பேட்ச் ஒர்க்கால் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் செல்லும்போது, இந்த பேட்ச் ஒர்க்குகள் உயிருக்கே ஆபத்தாகின்றன. மறுபுறம் இந்த பேட்ச் ஒர்க் தரமானதாக இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. அதுதொடர்பான பணிகள் முடிந்த ஒரு சில வாரங்களிலேயே குழி மற்றும் பள்ளங்களில் நிரப்பபடும் தார் ஜல்லி பெயர்ந்து வந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு, அரசுக்கும் வீண் செலவு தான் அதிகரிக்கிறது.

அவதியில் சென்னை மக்கள்:

குண்டும் குழியுமான சாலைகளால் சென்னையில் சாலை விபத்துகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் அவரை அடுத்தடுத்து, மோசமான சாலைகளால் விபத்தில் சிக்குவதை தினசரி செய்திகளில் பார்க்க முடிகிறது. ஏற்கனவே, நகரின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் மோசமடைந்துள்ளன. வேலைக்கு செல்லும் நபர்கள் காலையிலும், மாலையிலும் புழுதி பறக்கும் சாலைகளில் வேர்த்து விறுவிறுத்து பயணிக்கின்றனர். அதில் மேலும் சிரமத்தை சேர்க்கும் வகையில் தான் இந்த ”பேட்ச் ஒர்க்” முறையும்.

”தரமான சாலைகளே தேவை”

விபத்துகளை குறைக்கவும் உயிரிழப்புகளை தடுக்கவும், அரசு கூடுதல் கவனம் செலுத்தி, நீண்ட கால தீர்விற்காக தரமான சாலைகளை அமைப்பதே நல்ல தீர்வாக இருக்கும். அதைவிடுத்து இடைக்கால தீர்வாக பேட்ச் ஒர்க் செய்வது, மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயல் என்பதோடு, மக்களின் உயிரின் மீது அக்கறையற்ற மனப்பான்மையையே காட்டும். எனவே, பேட்ச் ஒர்க் வேண்டாம், தரமான சாலைகளே வேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget