மேலும் அறிய

சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

சென்னையில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு எந்தவித இ-பதிவும் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 21-ந் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை வரும் 28-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக  அரசின் இந்த புதிய உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைககளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அதே கட்டுப்பாடுகள் வரும் 28-ந் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ள மதுரை, விருதுகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடைகள் திறப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சில கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

இதையடுத்து, மூன்றாவது வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் இரண்டாவது வகை மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துள் மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்சாதன வசதி இல்லாமலும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கும் தமிழக அரசு சென்னையில் அனுமதித்துள்ளது. மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகளுடன் அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னைக்குள் இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம் : தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன?

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த பயணங்களின்போது இ பதிவு இல்லாமல் பொதுமக்கள் பயணிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. வாடகை டாக்சிகளில் பயணிகள் இல்லாமல் மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் பயணிகள் இல்லாமல் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி சுமார் 460 நபர்களுக்கு மட்டுமே புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தவித இ-பதிவும் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடக்கம் முதல் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதால் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 183 நபர்களுக்கு என்ற அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவாக பதிவானதையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

தலைப்பு செய்திகள்

ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
செங்கல்பட்டு மக்களுக்கு செம குட் நியூஸ்! செய்யூரில் உருவாகும் பிரம்மாண்ட தீம் பார்க் & ரிசார்ட்ஸ்!
செங்கல்பட்டு மக்களுக்கு செம குட் நியூஸ்! செய்யூரில் உருவாகும் பிரம்மாண்ட தீம் பார்க் & ரிசார்ட்ஸ்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget