மேலும் அறிய

புடவைக்காக போன உயிர்! கல்லூரி விழாவில் அக்கா புடவை.. திட்டியதால் மனமடைந்த தங்கை தற்கொலை!

செங்கல்பட்டிலிருந்து - சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார (விரைவு) இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை..
 
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கார் தெருவைச் சார்ந்த மாரிமுத்து இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா(20) சென்னை பொதேரியில் உள்ள பிரபல  கல்லூரியில் , பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.  சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து பொத்தேரி வரை தினமும் , தொடர்வண்டி மூலம் பொத்தேரி செல்வது வழக்கம். அந்த வகையில் மாணவி  இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக சிங்கபெருமாள்கோவில் இரயில் நிலையத்திற்கு வந்த மாணவி, திடீரென செங்கல்பட்டிலிருந்து -  சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார (விரைவு) இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
 

புடவைக்காக போன உயிர்! கல்லூரி விழாவில் அக்கா புடவை.. திட்டியதால் மனமடைந்த தங்கை தற்கொலை!
 
இதனை பார்த்த இரயில் பயணிகள் பதறிப்போன நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

புடவைக்காக போன உயிர்! கல்லூரி விழாவில் அக்கா புடவை.. திட்டியதால் மனமடைந்த தங்கை தற்கொலை!
 
அக்காவுடன் சண்டை...
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , மாணவி நேற்று கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு கல்ச்சுரல்ஸ் விழாவில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார்.  மேலும் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது, அக்காவான பவித்ராவின் சேலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிரோஷாவின் அக்கா பவித்ரா ஏன் என்னுடைய சேலையை பயன்படுத்தினாய் என நேற்று நள்ளிரவு சண்டையிட்டதாக கூறப்படுகிறது . இதனால் கவலை அடைந்த மாணவி,  
 இரவு மற்றும் காலையும் உணவை சாப்பிடாமல் புறக்கணித்துள்ளார்.
 
ரயில் முன் பாய்ந்த மாணவி
 
மாணவியின் தந்தை சமாதானம் செய்தும் சமாதானம் அடையாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து  காலை தந்தை இருசக்கர வாகனத்தில் மாணவியை ரயில்வே நிலையம் வரை கொண்டு வந்து விட்டுள்ளார். மன உளைச்சல் இருந்த மாணவி விரைவு வண்டி வந்ததை பார்த்தவுடன், பிளாட்பாரம் இருந்து இறங்கி, ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தனது இரு கைகளால் காது முடிகொண்டு படுத்துள்ளார் . இதனால் நிரோஷா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி  உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget