மேலும் அறிய

Chennai: சென்னையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! வித்தியாச சத்தம்.. திடீர் புகை.. நடு ரோட்டில் எரிந்த பேட்டரி பைக்!

வாகனத்தில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு வாகனத்தினை அங்கேயே நிறுத்தி விட்டு சற்று தள்ளி சென்றுள்ளார் திடீரென அவரது இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பற்றி எரியத் துவங்கியது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகன் கணேஷ் இவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இன்று மாலை பணியை முடித்துவிட்டு தன்னுடைய பேட்டரி வாகனத்தில் வழக்கம் போல் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருவொற்றியூர் மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய இரு சக்கர வாகனத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான மாறுபட்ட சத்தம் வருவதை கண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது அவருடைய வாகனத்தில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு வாகனத்தினை அங்கேயே நிறுத்தி விட்டு சற்று தள்ளி சென்றுள்ளார் திடீரென அவரது இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பற்றி எரியத் துவங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செய்வது அறியாமல் சற்று நேரம் திகைத்து நிற்க அதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டது அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான தண்ணி லாரியை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Chennai: சென்னையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! வித்தியாச சத்தம்.. திடீர் புகை.. நடு ரோட்டில் எரிந்த பேட்டரி பைக்!

இதனை அடுத்து கணேஷ் இந்த தகவலை தனது தந்தை பாலமுருகன் அவருக்கு செல்போன் வாயிலாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சம்பவம் குறித்து மாதவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் இந்த எலக்ட்ரிக் வாகனம் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த வாரத்திலேயே இது 3வது சம்பவமாக நடந்துள்ளது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் மின்சார பைக் வெடித்து புகைமண்டலம் ஏற்பட்டதில், தந்தை மகள் இருவரும் வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பராமரிப்பது எப்படி?

1. உற்பத்தி செய்யும் போதே அதில் ஏதாவது சில குறைகள் இருந்தால் இது போன்று நடக்கலாம். 

2. அதே போல ப்ளக் பாயிண்ட்டில் ப்ளக்கை சரிவர பொருத்தாமல் இருந்தாலும் இந்த மாதிரியான சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. 

3. வாகனத்தின்  பேட்டரி பழுதாக இருந்தாலும் இது போன்று நடக்கலாம்.

4. பேட்டரி அதிகமான நேரம வெயிலில் இருந்து சூடாவது உள்ளிட்ட சில சுற்றுசூழல் காரணங்களாலும் இது போன்ற விபத்து ஏற்படலாம். அதற்கு காரணம், பேட்டரியில் இருப்பது ரசாயன கலவை. அதனால்தான் இவ்வாறு நடக்கிறது. 

5.  இது போன்ற விபத்துகளை தவிர்க்க, முதலில் வாகனத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து நிறுவனம் தரும் அறிவுரைகள் அடங்கிய கையேடை கவனமாக படிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்தவும் வேண்டும். 

 

தலைப்பு செய்திகள்

"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
வனப்பகுதிகளில் இனி அதிரடி வேட்டை! புதிய ஆயுதங்களை வழங்கி மாஸ் காட்டிய வனத்துறை அமைச்சர்!
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
​"மனிதநேயம் இன்னும் சாகலப்பா.." தாம்பரம் அரசு பஸ் டிரைவர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுகள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget