மேலும் அறிய

ஆருத்ரா மோசடி வழக்கு திடீர் ட்விஸ்ட்..! சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்..! கிடைக்குமா மக்கள் பணம்?

ரூசோ என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

ஆருத்ரா நிதி நிறுவனம்
 
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு நிதி நிறுவனம் , கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் , மக்களை ஏமாற்றி பல ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடாக பெற்ற நிறுவனம் தான் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால்,  மாதம் 30 சதவீதம் வரை வட்டியாக பணம் தரப்படும் எனக் கூறி, சென்னை செங்கல்பட், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2500 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியதின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு  , விசாரணை நடைபெற்று வருகிறது.
 

ஆருத்ரா மோசடி வழக்கு திடீர் ட்விஸ்ட்..! சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்..! கிடைக்குமா மக்கள் பணம்?
குவிந்த புகார்கள்
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ரூ.2,438 மோசடி செய்ததாக  சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்து உள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் பேச்சு முத்துராஜ் (எ) ரபீக், ஐயப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து,  கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அவர்களின்  வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
 
தொடர்ந்து சிக்கும் இயக்குனர்கள்
 
 
மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த மைக்கேல் ராஜ், சென்னையை சேர்ந்த நாராயணி உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தின் அரியலூர் மாவட்டம் குமிழன்குழி பகுதியை சேர்ந்த முக்கிய ஏஜென்டான செந்தில்குமார் (34) என்பவரை நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கோடியே 97 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் அளித்த தகவலின்படி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.7.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் செந்தில்குமாரிடம் இருந்து இதுவரை 2.57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

ஆருத்ரா மோசடி வழக்கு திடீர் ட்விஸ்ட்..! சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்..! கிடைக்குமா மக்கள் பணம்?
 
 திரைப்பட தயாரிப்பாளர் 
 
 
காஞ்சிபுரம், ஆர்கே கோவில் திருப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் ரூசோ , இவர் காஞ்சிபுரத்தில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.‌ அதேபோல இவர் 'ஒயிட் ரோஸ்'  என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் ரூசோ , காவல் அதிகாரியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.‌ அதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.‌ பல முகங்களைக் கொண்ட ரூசோ , பல லட்சம் மதிப்புள்ள கார்களில் வலம் வருவதையும், அப்பகுதியில் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.  திரைப்பட தயாரிப்பாளராக இருந்த இவர், பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். 

ஆருத்ரா மோசடி வழக்கு திடீர் ட்விஸ்ட்..! சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்..! கிடைக்குமா மக்கள் பணம்?
இந்த நிலையில்தான் இவர், பல கோடி ரூபாய் முதலீடுகளை , பெற்று ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூசோவை கைது செய்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ரூசோ வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு கோடியை 40 லட்ச ரூபாய் முதற்கட்டமாக முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Candidates : எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Embed widget