மேலும் அறிய

திருவாரூர்: அஜாக்கிரதையின் உச்சம்.. ரத்த மாதிரியோடு சாலையோரம் கொட்டப்பட்ட ஊசிகள்.!

திருவாரூரில் ரத்தத்துடன் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட ஊசிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சோத்தக்குடி கிராமமும் உள்ளது. இந்தப்பகுதியில் கிராமப்புற சாலையோரத்தில் 200க்கும் மேற்பட்ட ஊசிகள் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்தத்துடன் கொட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் கொட்டிக்கிடக்கும் ஊசிகளை அந்த பகுதிவாசிகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நன்னிலம் பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அதுமட்டுமின்றி தனியார் உடல் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

திருவாரூர்: அஜாக்கிரதையின் உச்சம்.. ரத்த மாதிரியோடு சாலையோரம் கொட்டப்பட்ட ஊசிகள்.!
ரத்தத்துடன் கொட்டப்பட்டுள்ள ஊசிகளில் இருப்பது யாருடைய ரத்த மாதிரிகள், எங்கிருந்து எடுக்கப்பட்டது, அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் இருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டு உள்ளதா, என அந்த பகுதி வாசிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய பகுதியில் இதுபோன்று ரத்தத்துடன் 200க்கும் மேற்பட்ட ஊசிகள் கொட்டிக் கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி திரைப்பட பாணியில் உடல் உறுப்புகளுக்காக கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் இதுபோன்ற ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வது வழக்கம். அதுபோன்ற சம்பவங்களுக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டுள்ளனவா என பல்வேறு கேள்விகளும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

திருவாரூர்: அஜாக்கிரதையின் உச்சம்.. ரத்த மாதிரியோடு சாலையோரம் கொட்டப்பட்ட ஊசிகள்.!
சம்பவ இடத்தில் திருக்கண்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சீலன் ஆய்வுசெய்து சுகாதார துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் சிறுவர்கள் விளையாடச் செல்வதற்கு அந்த பகுதியின் வழியாக  செல்வது வழக்கம் இந்நிலையில் தவறுதலாக சிறுவர்கள் உடலில் அந்த ஊசி குத்தினால் ஊசியில் இருக்கும் இரத்தம் அவர்களது உடலுக்குள் சென்று பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர் உடனடியாக சாலையோரத்தில் கொட்டிக் கிடக்கின்ற ரத்த மாதிரிகளை உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்துடன் அந்த பகுதி மக்கள் உள்ளனர். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு கொட்டப்பட்டுள்ள ஊசிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப்புற சாலை என்பதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா கருவிகள் இல்லை. இதனைப் பயன்படுத்திய மர்மநபர்கள் இரவு நேரத்திலோ அல்லது பகல் வேளையில் யாரும் இல்லாத சமயத்திலோ ஊசிகளை கொண்டுவந்து வீசி சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Embed widget