மேலும் அறிய

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

கட்சியை விட்டு நீக்கிய விரக்தியில் புகழேந்தி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் என்ற ரீதியில் பேசி வருகிறார். ஆனால் அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடித்து வருகிறது. அதிமுக வலுவான நிலையில் உள்ளது. -காமராஜ்

அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடிக்கிறது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி.
 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமிநாசினி, ஆக்சிஜன் கன்வர்ட்டர், உள்ளிட்ட பொருட்களை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது..
 
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இருந்த போதிலும் கடந்த கொரோனா முதல் அலையின்போது 6900 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தோம். அரசு கூடுதலாக கவனம் செலுத்தி கொரோனா தொற்றை குறைக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் கிராமப்புற பகுதிகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி கொரோனா தொற்றை குறைக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பல இடங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். 
 
குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தி இந்த மாதம் 9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றிட வேண்டும். தற்போது வரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை ஆணையத்திடம் வலியுறுத்தி தமிழக அரசு பெற வேண்டும். அப்போது தான் கடைமடை வரை தண்ணீரை கொண்டு சென்று குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டுமென்றால் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மழைக்காலம் தொடங்குகிற வரை முறை வைக்காமல் அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும். அப்போதுதான் முழுமையாக குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். அதேபோல விவசாயிகளுக்கு தேவையான விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்களையும் வேளாண் சார்ந்த இயந்திரங்களையும் தயார் நிலையில் அரசு வைத்திருக்க வேண்டும். தற்போது வேளாண் தொழில் இல்லாத மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து இயந்திரம் சார்ந்த பொருட்களையும் கொண்டுவந்து குறுவை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
 
கட்சியை விட்டு நீக்கிய விரக்தியில் புகழேந்தி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் என்ற ரீதியில் பேசி வருகிறார். ஆனால் அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடித்து வருகிறது. அதிமுக வலுவான நிலையில் உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகிறது. அரசிடம் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் போது அதனை பாராட்டுவோம், வரவேற்போம். நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதனை விமர்சனம் செய்வோம். அரசு பொறுப்பேற்று 40 நாட்களே ஆகிறது, ஆகையால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதைப் பற்றி விமர்சனம் செய்வோம்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சித்த மருத்துவம் தேவை. சித்த மருத்துவம் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தொற்று வந்துவிட்டாலோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டால் ஆங்கில முறை மருத்துவத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. தொற்று ஏற்படுவதற்கு முன்னால் சித்த மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவ முறைகளை முழுமையாக கையில் எடுத்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget