மேலும் அறிய
12 PM Headlines December 08: நண்பகல் 12 மணி முக்கியச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது இதுதான்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

12 PM Headlines Today 8th december Headline News Tamilnadu India World
தமிழ்நாடு:
- தென்காசியில் 182 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை
- புயல் எச்சரிக்கை காரணமாக வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால், சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என தகவல்
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- ஈரோட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- தேனி - போடி புதிய ரயில் பாதை: ”அதிவேக தொழில்நுட்ப ஆய்வு நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம்” என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா:
- குஜராத்தில் இமாலய வெற்றியுடன் ஆட்சியை பாஜக தக்கவைக்கிறது. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
- இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்
- வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு- பதேர்வா, கதுவா, தோடா, உதம்பூர், ஜம்மு, கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- டெல்லி மாநகராட்சி தேர்தலில் 126 இடங்களை வென்று டெல்லியை கைப்பற்றியுள்ளது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.
- பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
- நாட்டின் வடக்குப் பகுதிகளில் பனி மூட்டத்தின் போது ரயில்களை சீராக இயக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
- இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்: மத்திய அரசு தகவல்
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது என மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- மெட்டாவை தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக், அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
- வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ், குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
- அண்மைக் காலமாக இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வது இயலாது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்.
- உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- ப்ரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
சென்னை
தமிழ்நாடு
மதுரை
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















