மேலும் அறிய

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

வீட்டில் இருக்கும் தோசைக்கல்லை வைத்தே ஹோட்டலில் செய்யும் மொறு மொறு மசால் தேவை செய்யும் முறைக் குறித்து இங்கே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

வீட்டில் உள்ள  இரும்புச்சட்டியிலும் தோசை மொறு மொறுன்னு மற்றும் மிருதுவாக வர வேண்டும் என்றால் சில வழிமுறைகளை நாம் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

தென்னிந்திய உணவு பட்டியல்களில் முக்கிய இடம் வகிப்பது தோசை தான். “தோசையம்மா, தோசை இது அம்மா சுட்ட தோசை “என்று சிறுவயதில் இருந்தே அந்தப்பாடலைக் கேட்டதுனால தானோ இப்பவும் என்ன டிபன் வேண்டும் என்று கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எனக்கு மொறு மொறு தோசைத் தான் வேணும்  என்பார்கள். ஆனால் என்ன?  பல வீடுகளில் இன்னமும் தோசை ஒழுங்காக சுட வருவதில்லை என்று தான் கூற வேண்டும். பல நேரங்களில் தோசைக்கல்லிருந்து தோசையை புரட்டிப்போடும் போது கிழித்துவிடும் அல்லது கருகிவிடும். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆசையாய் தோசை சுட்டுத்தரும் நம் அம்மாக்களைத் தான் பல நேரங்களில் நாம் திட்டித்தீர்த்திருப்போம்.  இனி அந்த கவலை யாருக்கும் வேண்டும். வீட்டில் இருக்கும் தோசைக்கல்லை வைத்தே ஹோட்டலில் செய்யும் மொறு மொறு மசால் தேவை செய்யும் முறைக் குறித்து இங்கே கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

 நம் வீட்டிலேயே இரும்புச்சட்டியில் ஹோட்டல்களில் இருப்பது போல் மிருதுவான தோசை செய்யும் சில வழிமுறைகள்:

முதலில், வீட்டில் இருக்கும் இரும்புச்சட்டியில் நீங்கள் தோசை செய்ய விரும்பினால், முதலில் தோசை சட்டியை  எண்ணெய் அல்லது அழுக்கு போன்றவை எதுவும் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கேஸ் ஸ்டவ்வை சற்று குறைத்து வைத்துக்கொண்டு, தோசைக்கல்லை சூடாக்கி அதன் மீது 1 டீஸ்பூன் எண்ணெய் வைத்துக்கொள்ள வேண்டும்.  தோசைக்கல் நன்றாக சூடாக்கியதும் கேஸ் ஸ்டவ்வை அணைக்க வேண்டும். இப்படி மேற்கொள்ளும் போது  non-stick தோசை சுடுவதுப் போல இரும்புச்சட்டியிலும் தோசை நன்றாக செய்யலாம்.

தோசைக்கல்லை நன்றாக சூடாக்கி அதனை ஆற விடவேண்டும். பின்னர் தோசை செய்யும் போது கடாயில் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும். இதனையடுத்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது ஈரமான துணியால் எண்ணெயைத் துடைத்து சுத்தம் செய்யவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதனை லேசாகத்துடைத்துவிட்டு தோசை செய்யலாம். இந்த வழிமுறையைப்பின்பற்றினால் மொறு மொறு தோசையை நாம் செய்ய முடியும்.

ஒரு வேளை வீட்டில் உள்ள இரும்புச்சட்டியில், தோசையைப் புரட்டுவதில் சிரமம் இருந்தால், தோசைக்கரண்டியை சிறிது தண்ணீரில் நனைத்து, தோசையைப் புரட்டிப்போடலாம். இவ்வாறு மேற்கொள்ளும் போது தோசை கிழியால் எளிதாகப்புரட்டிப்போட முடியும்.

தோசை மொறு மொறுன்னு வர்றதே இல்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..தேங்க்யூ சொல்வீங்க..

இதோடு பாதியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சிறிது தேய்த்து இரும்பு தோசைக்கல்லில் தேய்க்கலாம். இதனால் நீங்கள் செய்யும் தோசை மிகவும் மிருதுவாக உங்களுக்குக் கிடைக்கும். இதுப்போன்ற முறைகளைப்பின்பற்றினாலும் தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டிருந்தால், கடாயில் சிறிது மாவு எடுத்து நன்றாக சுத்தம் செய்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட முறைகளில் சற்று நாம் இரும்புச்சட்டியில் தோசை சுடும் போது பின்பற்றினாலே மிருதுவான மற்றும் மொறு மொறு தோசையை நாம் சாப்பிடலாம்..  ஒருவேளை நீங்கள் non stick தோசைக்கல்லில் சமைக்கிறோம் என்றால், கடாயை ஒரு முறை சூடாக்கவும். பின்னர் ஸ்டவ்வை அணைத்து சிறிது நேரம் தோசைக்கல்லை ஆற வைக்கவும். இதனையடுத்து தோசை சுடும் போது நமக்குப்பிடித்த மெல்லிய மற்றும் மிருதுவான தோசையை நாம் பெற முடியும்.

எனவே இனிமேல் வீட்டில் உள்ள இரும்புச்சட்டியில் தோசை சுட வருவதில்லை என கவலை வேண்டாம்…மேற்கண்ட முறைகளை சற்று நாமும் டிரை பண்ணிப்பார்ப்போமோ?.....

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget