மேலும் அறிய

Water Bottle Issue: ஆத்தாடி..! 1 நிமிடத்திற்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள்.. இயற்கையை சூறையாடும் மனிதகுலம்

Water Bottle Issue: பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் இயற்க வளத்தை, மனித குலம் அசுத்தப்படுத்துவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Water Bottle Issue: உலகம் முழுவதும் ஒவ்வொரு 60 விநாடிகளுக்கும், 10 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 நொடிகளில் 10 லட்சம் தண்ணீர் பாட்டில்கள்..

தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி, ”உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பன செய்யப்படுகின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் தண்ணீர் பாட்டில் நுகர்வு மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்லது. தொழில்துறையின் இந்த மகத்தான உலகளாவிய வெற்றியானது மிகப்பெரிய சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் சமூக பாதிப்புகளை அட்ப்படையாக கொண்டுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் தேவை அதிகரித்து வருவது, வசதி, பெயர்வுத்திறன், உணரப்பட்ட ஊட்டச்சத்து நன்மைகள், குழாய் நீரின் தரத்தின் மீதான அவநம்பிக்கை மற்றும் தனிப்பட்ட சுவை விருப்பங்கள் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. தண்ணீரின் நுகர்வுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவது, மனித மற்றும் புவியின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களின் தாக்கங்கள் என்ன?

நச்சுக் கசிவு: பிளாஸ்டிக் பாட்டில்கள் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், பிபிஏ மற்றும் பிற நாளமில்லாச் சுரப்பி சீர்குலைப்பான்கள் போன்ற தீங்கு விளைவிப்பான்களை உமிழ்கின்றன.  இவை இனப்பெருக்க ஹார்மோன்கள், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் குளுக்கோகார்டிகாய்டு ஏற்பிகளின் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிடலாம். பிபிஏவின் வெளிப்பாடு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிற்கால வாழ்க்கை சுகாதார பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சீர்கேடு: கடலை மாசுபடுத்தும் காரணிகளில், பிளாஸ்டிக் பாட்டில்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது.  அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணிர் பாட்டில்கள் 11.9% ஆகும். பிளாஸ்டிக் பைகள் முதலிடத்தில் தொடர்கிறது. உலகளவில், வெறும் 9% பாட்டில்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கலால் மண் மற்றும் வண்டல் மாசுபாடு, கடல் திரட்சி மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி போன்ற இயற்கை அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.

பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் : பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்தி ஆற்றல் மிகுந்ததாகும், இது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.

அரசாங்கங்களுக்கான கோரிக்கைகள்:

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், பாதுகாப்பான குடிநீரை அணுகுவதில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலலின் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. இதை அடைய, மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவசியம். அவர்கள் கோரிக்கையை உருவாக்கலாம் மற்றும் கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கங்களை வலியுறுத்தலாம். அதன் மூலம், சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான அரசாங்க பொறுப்புணர்வை உருவாக்க முடியும். "குழாய் நீரின் நன்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் சுகாதார அபாயங்கள் மற்றும் குழாய் நீரின் சுவை மற்றும் வாசனை பற்றிய கவலைகள் பற்றிய தெளிவான ஆதார அடிப்படையிலான தகவல்களை வழங்க வேண்டும்" என்றும் அரசாங்கங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
Embed widget