மத்திய புலனாய்வு பிரிவில் சூப்பர் வாய்ப்பு! 10-ம் வகுப்பு தேர்ச்சியா? உடனே விண்ணப்பிங்க! சம்பளம் 69,100 வரை
முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 30 மதிப்பெண், ஒபிசி பிரிவினர் 28, எஸ்சி/எஸ்டி 25 மற்றும் EWS 30 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மத்திய அரசு புலனாய்வு பிரிவில் பணி எதிர்பார்ப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.
மத்திய வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு அமைச்சகத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மெகா அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மோட்டார் போக்குவரத்து பிரிவில் உள்ள பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக வரும் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது.
தேசிய அளவில் 37 இடங்களில் உள்ள புலனாய்வு அலுவலகங்களில் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகப்படியாக ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) 455
வெளியுறவுத் துறையில் குரூப்-சி கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பொதுப் பிரிவு - 219, ஒபிசி - 90, எஸ்சி - 51, எஸ்டி - 49, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 46 என நிரப்பப்படுகிறது. இதில் அதிகபடியாக டெல்லியில் 127 பணியிடங்கள் உள்ளன. சென்னையில் 11 பணியிடங்கள் உள்ளன.
இப்பணியிடங்களுக்கு 28.09.2025 தேதியின்படி, விண்ணப்பதார்களின் வயது 18 முதல் 27 வரை இருக்கலாம். விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 வருடங்களும், ஒபிசி பிரிவை சேரந்தவர்களுக்கு கூடுதலாக 3 வருடங்களும் வழங்கப்படுகிறது. அவைமட்டுமின்றி, அரசு பணியில் உள்ள விண்ணப்பதார்களுக்கு 40 வயது வரை தளர்வு உள்ளது.
கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவிற்கு 35 வயது வரையும், ஒபிசி பிரிவில் 38 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவில் 40 வயது வரையும் இருக்கலாம்.
பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் குறித்த அறிவு மற்றும் குறைந்தது 1 ஆண்டு கார் ஓட்டுதலில் அனுபவம் தேவை. விண்ணப்பிக்கும் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருத்தல் அவசியமாகும்.
புலனாய்வு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 3 கீழ் அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் அதிகபடியாக ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஒதுக்கீடாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகை வழங்கப்படும்.
புலனாய்வு பிரிவு பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 2 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படும். முதல் கட்ட தேர்வு (Tier I) ஆன்லைன் வழியாக 100 கேள்விகளுடன் கொள்குறி வகையில் நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண்கள் அளிக்கப்படும். 0.25 மதிப்பெண்கள் நெகட்டிங் மதிப்பெண்கள் ஆகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2ஆம் கட்ட தேர்வு (Tier II) திறன் மற்றும் நேர்காணலாக நடத்தப்படும். வாகனம் ஓட்டும் திறன் மற்றும் நேர்காணல் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 30 மதிப்பெண், ஒபிசி பிரிவினர் 28, எஸ்சி/எஸ்டி 25 மற்றும் EWS 30 மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டாம் கட்ட தேர்வில் 40% மதிப்பெண்கள் ஆகும். இறுதியாக இரண்டு கட்ட தேர்வில் சேர்ந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு, EWS மற்றும் ஒபிசி பிரிவு ஆண் விண்ணப்பதார்கள் ரூ.650 செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரும் 6-ம் தேதி முதல் தொடங்கி, 28-ம் தேதி வரை பெறப்படுகிறது.
Before You Go
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















