மேலும் அறிய

மத்திய புலனாய்வு பிரிவில் சூப்பர் வாய்ப்பு! 10-ம் வகுப்பு தேர்ச்சியா? உடனே விண்ணப்பிங்க! சம்பளம் 69,100 வரை

முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 30 மதிப்பெண், ஒபிசி பிரிவினர் 28, எஸ்சி/எஸ்டி 25 மற்றும் EWS 30 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மத்திய அரசு புலனாய்வு பிரிவில் பணி எதிர்பார்ப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. 

மத்திய வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு அமைச்சகத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மெகா அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மோட்டார் போக்குவரத்து பிரிவில் உள்ள பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக வரும் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது.

தேசிய அளவில் 37 இடங்களில் உள்ள புலனாய்வு அலுவலகங்களில் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகப்படியாக ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) 455

வெளியுறவுத் துறையில் குரூப்-சி கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பொதுப் பிரிவு - 219, ஒபிசி - 90, எஸ்சி - 51, எஸ்டி - 49, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 46 என நிரப்பப்படுகிறது. இதில் அதிகபடியாக டெல்லியில் 127 பணியிடங்கள் உள்ளன. சென்னையில் 11 பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு 28.09.2025 தேதியின்படி, விண்ணப்பதார்களின் வயது 18 முதல் 27 வரை இருக்கலாம். விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 வருடங்களும், ஒபிசி பிரிவை சேரந்தவர்களுக்கு கூடுதலாக 3 வருடங்களும் வழங்கப்படுகிறது. அவைமட்டுமின்றி, அரசு பணியில் உள்ள விண்ணப்பதார்களுக்கு 40 வயது வரை தளர்வு உள்ளது.

கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவிற்கு 35 வயது வரையும், ஒபிசி பிரிவில் 38 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவில் 40 வயது வரையும் இருக்கலாம்.

பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் குறித்த அறிவு மற்றும் குறைந்தது 1 ஆண்டு கார் ஓட்டுதலில் அனுபவம் தேவை. விண்ணப்பிக்கும் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

புலனாய்வு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 3 கீழ் அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் அதிகபடியாக ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஒதுக்கீடாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகை வழங்கப்படும்.

புலனாய்வு பிரிவு பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 2 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படும். முதல் கட்ட தேர்வு (Tier I) ஆன்லைன் வழியாக 100 கேள்விகளுடன் கொள்குறி வகையில் நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண்கள் அளிக்கப்படும். 0.25 மதிப்பெண்கள் நெகட்டிங் மதிப்பெண்கள் ஆகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2ஆம் கட்ட தேர்வு (Tier II) திறன் மற்றும் நேர்காணலாக நடத்தப்படும். வாகனம் ஓட்டும் திறன் மற்றும் நேர்காணல் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 30 மதிப்பெண், ஒபிசி பிரிவினர் 28, எஸ்சி/எஸ்டி 25 மற்றும் EWS 30 மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டாம் கட்ட தேர்வில் 40% மதிப்பெண்கள் ஆகும். இறுதியாக இரண்டு கட்ட தேர்வில் சேர்ந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிக்கு https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு, EWS மற்றும் ஒபிசி பிரிவு ஆண் விண்ணப்பதார்கள் ரூ.650 செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரும் 6-ம் தேதி முதல் தொடங்கி, 28-ம் தேதி வரை பெறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Tamilnadu Round Up: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget