மேலும் அறிய

10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு - முழு விபரம் இதோ..!

Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 05 அங்கன்வாடி பணியாளர், 01 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 04 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 

இந்த பணியிடங்களுக்கான வட்டார வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட திட்ட அலுவலகம், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகைகளில் வெளியிடப்படும். ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த பெண்கள் WWW.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்து நாட்கள் கால அவகாசம் 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 7, 2025 முதல் ஏப்ரல் 24, 2025 வரை (10 வேலை நாட்களுக்குள்), தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்டாரத்தின் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் ஊதிய விவரம்

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பன்னிரண்டு மாத காலம் நிறைவு செய்த பின்னர், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். அங்கன்வாடி பணியாளர் ரூ. 7700 - ரூ. 7700 - 24200, குறு அங்கன்வாடி பணியாளர் ரூ. 5700/- ரூ. 5700 - 18000, அங்கன்வாடி உதவியாளர் ரூ. 4100- ரூ. 4100 - 12500 

தகுதிகள்

  • பொதுவான தகுதி: அனைத்து விண்ணப்பதாரர்களும் பெண்களாக இருக்க வேண்டும். 

 

  • தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

 

  • வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியான மாதத்தின் முதல் தேதியின்படி கணக்கிடப்படும்.

 

அங்கன்வாடி பணியாளர் - குறு அங்கன்வாடி பணியாளர்

  

  •  கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   

வயது வரம்பு:

  • பொதுப் பிரிவினர்: 25 முதல் 35 வயது வரை.

     

  • விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர்: 25 முதல் 40 வயது வரை.

     

  • மாற்றுத்திறனாளிகள்: 25 முதல் 38 வயது வரை.

   

  • இருப்பிடச் சான்று: காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்திற்கு விண்ணப்பிப்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். 

 

  • மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

 

அங்கன்வாடி உதவியாளர்

   

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   

வயது வரம்பு

  • பொதுப் பிரிவினர்: 20 முதல் 40 வயது வரை.

     

  • விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர்: 20 முதல் 45 வயது வரை.

     

  • மாற்றுத்திறனாளிகள்: 20 முதல் 43 வயது வரை.

 

  • இருப்பிடச் சான்று: அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அதே இருப்பிடச் சான்று நிபந்தனைகள் பொருந்தும்.

 

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் (தாய் / தந்தை இறப்புச் சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களையும் இணைக்க வேண்டும். மேலும் நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... காலிப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... காலிப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் !

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
TN Heavy rain warning : வெளுக்கப்போகுது கன மழை.! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு குறி- வானிலை மையம் அலர்ட்
இன்று பொத்துக்கிட்டு ஊத்தப்போகது வானம்.! இன்று எங்கெல்லாம் மழை.? வானிலை மையம் அலர்ட்
Jayakumar vs CM Vijay : Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: ஜூலை 17 முதல் ஆன்லைனில் சுயமாக பதிவு செய்வது எப்படி? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: ஜூலை 17 முதல் ஆன்லைனில் சுயமாக பதிவு செய்வது எப்படி? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
Embed widget