மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிப்பதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிப்பதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு


இதில், பாதுகாப்பு அலுவலர் பணிக்கான 2 இடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் நலன், சமூக நலன், கல்வி, தொழிலாளர் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கான 1 இடத்துக்கு விண்ணப்பிக்க, பி.எல்., அல்லது எல்.எல்.பி., குழந்தை நலன், சமூக நலன், தொழிலாளர் ஆகியவை தொடர்பான சட்ட பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு பணியிடங்களுக்கு ஊதியமாக ரூபாய் 21000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆற்றுப்படுத்துநர் (கவுன்சிலிங்) பணிக்கான 1 பணியிடத்துக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆற்றுப்படுத்துதல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமூகப் பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தை தொடர்பான களப்பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

கணக்காளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, பி.காம்., அல்லது எம்.காம்., படித்த கணக்காளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் வேண்டும். தகவல் பகுப்பாளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் (அ) புள்ளியியல் (அ) கணிதம்) படித்த, தகவல் தொகுப்பாளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய 3 பணிகளுக்கு ரூபாய் 14000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும். கணினி சார்ந்த பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 10000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறத்தொடர்பு பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குழந்தை நலன் சார்ந்த சான்றிதழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலன் தொடர்பான களப் பணியில் ஒர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 8000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேற்கூறிய அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் 62 வயதிற்கு மிகாமல் இருக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட இணைய தளத்திலிருந்து (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.  தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரிலோ அல்லது 04365-253018, 8015222327 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
India New Zealand FTA: வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
India New Zealand FTA: வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
Iran China Crude Oil: போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!
IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!
சிலிண்டர் தட்டுப்பாடு வருமா? - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் பரபரப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு வருமா? - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் பரபரப்பு
TN Election Vote Counting : மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget