மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிப்பதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிப்பதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு


இதில், பாதுகாப்பு அலுவலர் பணிக்கான 2 இடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் நலன், சமூக நலன், கல்வி, தொழிலாளர் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கான 1 இடத்துக்கு விண்ணப்பிக்க, பி.எல்., அல்லது எல்.எல்.பி., குழந்தை நலன், சமூக நலன், தொழிலாளர் ஆகியவை தொடர்பான சட்ட பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு பணியிடங்களுக்கு ஊதியமாக ரூபாய் 21000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆற்றுப்படுத்துநர் (கவுன்சிலிங்) பணிக்கான 1 பணியிடத்துக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆற்றுப்படுத்துதல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமூகப் பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு, சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தை தொடர்பான களப்பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

கணக்காளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, பி.காம்., அல்லது எம்.காம்., படித்த கணக்காளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் வேண்டும். தகவல் பகுப்பாளர் பணிக்கான 1 பணியிடத்துக்கு பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் (அ) புள்ளியியல் (அ) கணிதம்) படித்த, தகவல் தொகுப்பாளர் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய 3 பணிகளுக்கு ரூபாய் 14000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான 1 பணியிடத்துக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும். கணினி சார்ந்த பணிகளில் ஒர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 10000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறத்தொடர்பு பணியாளர் பணிக்கான 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குழந்தை நலன் சார்ந்த சான்றிதழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலன் தொடர்பான களப் பணியில் ஒர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ரூபாய் 8000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேற்கூறிய அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் 62 வயதிற்கு மிகாமல் இருக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட இணைய தளத்திலிருந்து (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.  தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரிலோ அல்லது 04365-253018, 8015222327 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பிக்க மறந்தால் இழப்பு உங்களுக்கு தான் !
சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: விண்ணப்பிக்க மறந்தால் இழப்பு உங்களுக்கு தான் !
காஞ்சிபுரம்: வேலை தேடும் இளைஞர்களே! 1000+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
காஞ்சிபுரம்: வேலை தேடும் இளைஞர்களே! 1000+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேலைவாய்ப்பு 2026: கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேலைவாய்ப்பு 2026: கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2026: ரூ.25,000 சம்பளத்தில் புதிய பணியிடங்கள்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2026: ரூ.25,000 சம்பளத்தில் புதிய பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக் கோப்பை; அரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Embed widget