மேலும் அறிய

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்கள் - மதுரை அரசு மருத்துவர் 

கொரோனாவில் இருந்து தப்பிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இயற்கை பானங்கள் குறித்து மதுரை அரசு ராஜாஜி இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்  விளக்குகிறார்.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்கள் - மதுரை அரசு மருத்துவர் 
 
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எளிதாக உடலில் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்களை, தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை அறிமுகம் செய்துள்ளது. கடந்த காலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோது, இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்கள் - மதுரை அரசு மருத்துவர் 
 
 இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சைப்பிரிவு மருத்துவர் நாகராணி கூறியதாவது,”கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இயற்கை மருத்துவத்தில் வழிமுறைகள் உள்ளன. அதாவது, நாட்டு நெல்லிக்காய் -½ துண்டு(50 மிலி), துளசி -20 இலைகள்( 50 மிலி), இஞ்சி - ¼ துண்டு(10 மிலி), எலுமிச்சை- ¼ துண்டு(5 மிலி), மஞ்சள் தூள்(சிறிதளவு), தண்ணீர் 150 மிலி ஆகியவைற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து பருக வேண்டும். பெரியவர்கள் 250 மிலி, சிறியவர்கள் 100 மிலி, ஒரு நாளைக்கு இரண்டு வேளை பருக வேண்டும்.
 

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்கள் - மதுரை அரசு மருத்துவர் 
இதுபோல், சூடான பானமும் இருக்கிறது. இஞ்சி அல்லது சுக்கு சிறிய துண்டு( 5 கிராம்), மிளகு( சிறிதளவு), அதிமதுரம்( சிறிதளவு), மஞ்சள் பவுடர்( சிறிதளவு), தண்ணீர் 250 மிலி, இவைகளை ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். பெரியவர்கள் 50 மிலி, சிறியவர்கள் 20 மிலி பருகலாம். இதற்கான மொத்த பொட்டலத்தை அரசு வழங்குகிறது. டீ தயார் செய்வதுபோல் தயார் செய்து பருகலாம். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இந்த நோய் எதிர்ப்பு பானத்திற்கான பொட்டலம் உள்ளது. தேவைப்படுபவர்கள் நேரில் வந்து வாங்கி கொள்ளலாம்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்கள் - மதுரை அரசு மருத்துவர் 
 
இது தவிர, முகத்திற்கு ஆவிபிடித்தல் முக்கியமானது. அதற்கும் தனியான நீராவி எந்திரம் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 8 நீராவி எந்திரங்கள் உள்ளன. அதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி எளிதாக நீராவி பிடிக்கலாம். காலை,மாலை வெறும் வயிற்றியல் வஜ்ராசனம், பத்மாசனம், சஷங்காசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்யலாம். எளிதான மூச்சு பயிற்சிகளான, அனுலோமா, விலோமா எனப்படும் மூச்சை உள்ளே இருந்து வெளியே விடவும்( 10 முறை).
 
3 நிமிடங்கள் உள்ளே இழுத்து 3 நிமிடங்கள் மூச்சை வெளியே விடவும். பிராமரி பிராணயாமம் எனப்படும் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடும் முன் காதை ஆள்காட்டி விரலால் அனைத்து தலைமை முன்னோக்கி வளைத்து "ம்" என்ற சப்தத்துடன் மூச்சை வெளியே விட வேண்டும். கைகளை முன், பின் இழுத்து கொண்டு மூச்சை உள்ளடிக்கி வெளியே விடுவது, உடலையும் மனதையும் தளர்வாக்கும் பயிற்சியான பாதத்தில் தொடங்கி மேல் நோக்கி ஒவ்வொரு பாகமாக இறுக்கம் செய்து தளர்வாக்குதல் போன்ற பயிற்சிகள் பலனளிக்கும் “இவ்வாறு அவர் கூறினார்.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget