மேலும் அறிய

`கோவிஷீல்ட் இரண்டு டோஸ்களுக்கு இடையில் 84 நாள்கள் இடைவெளி ஏன்?’ - மத்திய அரசிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி!

கேரளா உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான 84 நாட்கள் கால இடைவெளியின் காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளா உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான 84 நாட்கள் கால இடைவெளியின் காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் மத்திய அரசிடம் இந்தக் கேள்வியை, கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது எழுப்பியுள்ளார். கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்று அதற்கான அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி சுரேஷ் குமார், இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை நீட்டிப்பது அதன் வீரியத்தை அதிகமாக்கும் என்றால், தான் 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்காக வருந்துவதாகக் கூறியுள்ளார். 

`கோவிஷீல்ட் இரண்டு டோஸ்களுக்கு இடையில் 84 நாள்கள் இடைவெளி ஏன்?’ - மத்திய அரசிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி!

இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிப்பதற்கு காரணம் மருந்து தட்டுப்பாடா, மருந்தின் வீரியத்தை அதிகரிப்பதற்காகவா என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் நீதிபதி சுரேஷ் குமார். மருந்து தட்டுப்பாடு தான் காரணம் எனில், கிடெக்ஸ் நிறுவனம் அடுத்த 84 நாட்கள் வரை காத்திருக்காமல், இரண்டாவது டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் மருந்தின் வீரியம் அதிகரிக்கும் எனில், அதுகுறித்த அறிவியல்பூர்வமான நிரூபணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த மனு மீது பதில் தெரிவிப்பதற்காக, ஆகஸ்ட் 26 வரை அவகாசம் கேட்டுள்ளார். நீதிமன்றமும் அவகாசம் அளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12 அன்று, உயர் நீதிமன்றம் கேரள மாநில அரசிடம் கோவிஷீல்ட் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 84 நாள்கள் கழித்த பிறகே, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுவதன் காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸுக்கும், இரண்டாம் டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை 4 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்கள் என உயர்த்தி அறிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. 

`கோவிஷீல்ட் இரண்டு டோஸ்களுக்கு இடையில் 84 நாள்கள் இடைவெளி ஏன்?’ - மத்திய அரசிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி!

கேரள அரசுத் தரப்பில் இருந்து, மத்திய அரசு பிறப்பிக்கும் விதிமுறைகளின் கீழ் கோவிட் தடுப்பூசிகள் கையாளப்படுவதாகக் கூறியது. நீதிமன்றத்தின் கேள்விக்கான பதிலைத் தெரிவிப்பதற்காக, மத்திய அரசுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது. கிடெக்ஸ் நிறுவனம் ஏறத்தாழ 5 ஆயிரம் ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், தற்போதைய விதிமுறைகளால் அடுத்த டோஸ் ஊசியை செலுத்த முடியவில்லை எனவும் வாதாடியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget