மேலும் அறிய

விழுப்புரம்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்

மரக்காணம் அருகே தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 100 இலவசம், சுகாதாரத்துறை ஆய்வாளர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுகுப்பம் கிராமத்தில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, அவருக்கு வரும் மத ஊதியத்தில் , தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ரூபாய் 100, மற்றும் இதனை தொடர்ந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் சமூக வலை தளங்களில் தடுப்பூசி பற்றிய தகவல்கள் தவறாக பரப்பப்பட்டு வருகிறது, இந்த அச்சம் போக்கும் வகையில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைத்துள்ளார், பின்னர் நடுக்குப்பம் கிராமத்து தடுப்பூசி மையம் என சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது, இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரம்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்

மேலும் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து நடுகுப்பம் கிராமத்தை 100% தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமாக சாதனை படைக்க உள்ளதாகவும், அதேபோல் அனைத்து கிராமங்களிலும் இது போன்ற பணியை தொடர அவர் நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மரக்காணம் பகுதியில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் விரைவில் விரட்டப்படும் எனவும் தெரிவித்தார். தொடக்க காலத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஓரளவு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அதே வேளையில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத மக்களை தடுப்பூசி போட வைக்க நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பரிசுகள், பிரியாணி போன்ற இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடுகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரூபாய் 100 இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விழுப்புரம்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.100 இலவசம்

கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் வேளையில், மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டால், தீவிர காய்ச்சல், சளி, இருமல் போன்ற  மிகவும் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக இப்போது உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று காரணமாக பலர் இறந்தும் வருகின்றனர். இந்த கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு சிறந்த வழி கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான். ஒருபுறம் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்தாலும், மறுபுறம் தடுப்பூசி கிடைத்தும் போடலாமா அல்லது வேண்டாமா என்ற எண்ணத்தில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். 

ஆரம்பத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது, அதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு கோவ்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.  அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-V தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்த கட்டுக்கதைகள் வாட்ஸ்அப் போன்ற சமுக ஊடகங்களில் பரவுவதால் மக்கள் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது . 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Embed widget