மேலும் அறிய

TN covid-19 death controversy : தமிழ்நாடு கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி : என்ன செய்யப்போகிறது அரசு?

கொரோனாவால் இறந்த பலபேரின் குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய பலன் எதுவும் இதனால் கிடைக்காமல் போகிறது.இதற்கு முழுக்காரணம் ஐ.சி.எம்.ஆர். மட்டும்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார் திமுக மக்களவை எம்.பி., செந்தில்குமார்.

தமிழ்நாடு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்கள் உண்மை எண்ணிக்கையை விடக் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அறப்போர் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் என 6 மாவட்ட மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை அரசு செய்திக்குறிப்பில் உள்ளதை விட 13.7 மடங்கு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. 


TN covid-19 death controversy : தமிழ்நாடு கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி : என்ன செய்யப்போகிறது அரசு?

இதுகுறித்த அறப்போர் இயக்கத்தின் செய்திக்குறிப்பில், "இந்த மருத்துவமனைகளில் ஏப்ரல் 2021-ஆம் ஆண்டில், இறப்பு எண்ணிக்கை 3009 ஆகவும் மே 2021-ஆம் ஆண்டில் 8690 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்கள் மற்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே 2021ல் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை 6  மருத்துவமனைகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மே மாதத்தின் இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே 2021ல் இந்த 6 மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை 11699. ஏப்ரல் மற்றும் மே 2019 எண்ணிக்கையை விட 7262 அதிகமாகவும் ஏப்ரல் மற்றும் மே 2020 எண்ணிக்கையை விட 8438 அதிகமாகவும் உள்ளது. எனவே இந்த மருத்துவமனைகளில் நிகழ்ந்திருக்கக் கூடிய கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கக்கூடும். அரசு செய்தி அறிக்கையில் இந்த மருத்துவமனைகளில், ஏப்ரல் மற்றும் மே 2021ல் நிகழ்ந்ததாக வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 863 மட்டுமே.எனவே இந்த 6 மருத்துவமனைகளின் இறப்பு வீதம், சுகாதாரத்துறை வெளியிட்ட எண்ணிக்கையை விட 13.7 மடங்கு அதிகமாக உள்ளது.மேலும், ICMR மற்றும் WHO அறிவுறுத்தலின் படி இறந்ததற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய Medical Certification for cause of death வழங்கப்படுவதில்லை’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு என்ன காரணம்?



TN covid-19 death controversy : தமிழ்நாடு கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி : என்ன செய்யப்போகிறது அரசு?
இதுகுறித்துக் கூடுதல் விளக்கமளித்துள்ள திமுக மக்களவை எம்.பி. மருத்துவர் செந்தில்குமார், ‘ஐ.சி.எம்.ஆர். கொடுத்த ஒழுங்குமுறைகளின்படிதான் இந்த மரணங்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ஒழுங்குமுறையின் கீழ் அல்லாமல் புள்ளிவிவரங்களை எடுத்தால் அறப்போர் வெளியிட்டிருக்கும் எண்ணிக்கை வரும்.ஐ.சி.எம்.ஆர்.ன் ஒழுங்குமுறைகளில் எங்களுக்கே உடன்பாடில்லை.கொரோனாவால் இறந்த பலபேரின் குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய பலன் எதுவும் இதனால் கிடைக்காமல் போகிறது. இதற்கு முழுக்காரணம் ஐ.சி.எம்.ஆர். மட்டும்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.   

இதனை எப்படிச் சரிசெய்யப்போகிறது அரசு?


TN covid-19 death controversy : தமிழ்நாடு கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி : என்ன செய்யப்போகிறது அரசு?

இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்கள் குறித்து விளக்கமளித்த சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், “அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ள பிரச்சினை இறப்புச் சான்றிதழ் தொடர்பானதல்ல, மரணத்திற்கான மருத்துவ சான்றிதழ் தொடர்பானது. ஏனெனில் சட்டரீதியான இறப்பு சான்றிதழ்கள் மரணத்திற்கான காரணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவரது புகாரின் அடிப்படையில் மருத்துவ சான்றிதழ், அறப்போரின் தரவு மற்றும் அறிக்கையுடன் ஓப்பீடு செய்யப்பட்டு , மேலும் உண்மையின் அடிப்படையில் ஏதேனும் சமரசம் தேவைப்பட்டால் மருத்துவமனைகள் இலவசமாகச் செய்யும்” எனக் கூறியுள்ளார்.

Also Read: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர ஏற்பாடு!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget